Thursday, December 10, 2009

பயர்பாக்ஸை அழகு படுத்த வேண்டுமா???


அழகு என்றால் இயற்கை என்பது தான் பலர் கருத்து. ஆனால்,அழகைபெருக்குவது நம் கையில் தான்இருக்கிறது.எப்படியென்றால்,பிளாக்கை எடுத்து கொண்டால்,துவக்கத்தில்பொதுவான தீம் தான் இருக்கும்.
ஆனால் அதையே நாம் மாற்றி,அழகை பெருக்குவதற்காக புதிய டெம்ப்ளேட்டுகள் தரமிறக்கி அழகு படுத்தி பார்க்கிறோம்.


இப்படி எல்லாம் அழகு பார்க்க நினைக்கும் நாம் ஏன் இனி பயர்பாக்ஸை அழகுபடுத்த கூடாது?

அப்படி நீங்கள் அழகு படுத்த விரும்பினால் இந்த இணையத்தளத்தில் சென்று நீங்கள் தீம்களை தரவிறக்கி கொள்ளுங்கள்.





மேலும் தீம்களை தரவிறக்க கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-களை சொடுக்குங்கள்.


1.இங்கே சொடுக்கவும்

2.இங்கே சொடுக்கவும்




நீங்கள் தீம்களை தரவிறக்கி கொண்ட பின்னர்,


tools மெனுவில் சென்று add-ons -->> themes சென்று நீங்கள் விரும்பிய தீம்களை செலக்ட் செய்து அழகு படுத்தலாம்.

Tuesday, December 8, 2009

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 -ஒரு அலசல்...


விஜய் டிவி தனது ஒவ்வொரு படைப்பையும்,அனைத்து தரப்பினரையும் கவரும் வண்ணமாகவே எடுத்து வருகிறது.

கனா காலங்கள்,அசத்த போவது யாரு,யாரு மனசுல யாரு,நடந்தது என்ன, போன்ற பல படைப்புகள் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் நிகழ்ச்சிகள்.


அந்த வரிசையில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் சிறந்து விழங்கி வருகிறது.இந்த நிகழ்ச்சியானது மூன்று முறை வெற்றிகரமாக மக்கள் மனதில் இடம் பிடித்தது,தற்போது நான்காவது முறையாக ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 என்ற பெயரில் மக்களின் பார்வைக்கு வந்து கொண்டு இருக்கிறது.


ஒரு முறை பார்த்தவரை மறுபடியும் பார்க்க தூண்டும் ஈர்ப்பு சக்தி நிறைந்த நிகழ்ச்சியாக இது திகழ்ந்து வருகிறது.இசை ஞானம் இருந்தால் தான் இந்த நிகழ்ச்சியினை பார்க்க முடியும் என்று சிலர் பார்பதில்லை,ஆனால் இந்த நிகழ்ச்சியை பொறுத்த வரை இசை ஞானம் தேவையில்லை,ரசிப்பு தன்மை மட்டும் இருந்தாலே போதும் அனைவருக்கும் பிடித்து விடும்.


ஏதாவது ஒரு தொலைக்காட்சி வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியை வெளியிட்டு வெற்றியை கண்டால்,அதே போல் தொடர்வதில் தமிழ்நாட்டு தொலைக்காட்சி துறையினர் இப்போது சிறந்து வருகின்றனர் என்றே தான் சொல்ல வேண்டும்.

எப்படியெனில்,

1.கலக்க போவது யாரு, சன் டிவி-யில் அசத்த போவது யாராக மாறியது,


2.ஜோடி நம்பர் 1 ,கலைஞர் டிவி-யில் மானாட மயிலாட என்று மாறியது,


இதற்கு சாட்சிகளாய் இருப்பினும்,ஏர்டெல் சூப்பர் சிங்கரும் ராஜ் டிவி-யில் வெளிவர ஆரம்பித்து விட்டது.


விஜய் தொலைகாட்சியை தவிர யாருமே,சுயமா சிந்திக்கவே மாட்டேன்கிறாங்க.

Monday, December 7, 2009

பெற்றால் தான் பிள்ளையா...


பத்மஸ்ரீ.கமல்ஹாசன் திரைப்பட துறையில் வந்து 50 வருடம் கடந்து விட்டது.அவர் பல தரப்பட்ட வேடங்களில் நடித்து, நடிப்பிற்க்கே பெருமை சேர்த்து கொடுத்தவர்.



ஆனால் இவர் மக்கள் நலத்திற்க்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.சில வருடங்களிற்கு முன்பே தன்னுடைய உடல் உறுப்புகளை எல்லாம் தானம் செய்து விட்டார்.



ரேடியோ ஹலோ fm,எய்ட்ஸ் தினத்தன்று ஒரு புதிய திட்டமானதை அறிமுகபடுத்தி அதை செயல் படுத்தும் நோக்கத்தில் கமல்ஹாசனை தொடர்பு கொண்டுள்ளனர்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்க பட்ட குழந்தைகளுக்கு காப்பீட்டு வசதிகள் செய்து கொடுப்பதே இந்த திட்டத்தின் முக்கியமான நோக்கம்.


கமல்ஹாசன் நோக்கத்தை கேட்ட மறு நிமிடமே தன்னுடைய முழு ஆதரவை இதற்காக தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்.அவர் முதல் கட்டமாக 150 குழந்தைகளை தத்து எடுத்து அவர்களுக்கான முழு பொறுப்பையும் ஏற்று கொண்டார்.அது மட்டுமல்லாமல் இந்த திட்டத்திற்கு "பெற்றால் தான் பிள்ளையா" என்று பெயரும் சூட்டி இருக்காராம்.பின்பு இதற்கான பிரசாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்.அவர் அனைவரிடமும் சொல்வதெல்லாம் "எதற்கெல்லாமோ செலவு செய்கிறோம்,ஒரு குழந்தைக்காக 750 கொடுங்கள்,அது அவர்களுடைய மருத்துவ வசதிக்காக பயன் படுத்த படும்,

ஏன்
?


" பெற்றால்
தான் பிள்ளையா"





உண்மையாகவே சொல்ல வேண்டுமென்றால் கமல்ஹாசன் ஒரு சரித்திர நாயகன் தான்.

Thursday, December 3, 2009

காதல் தரும் சோகம்



காதலித்து பார் இன்பம் வரும்.......
அதையே தொடர்ந்து பார் மிக பெரிய துன்பம் வரும்................




காதல் தோல்வியை பற்றி பல இடங்களில் பார்திருப்போம்,கேட்டிருப்போம்.அது நம்மை பெரிதாக பாதிக்காது.ஆனால் நம் வாழ்க்கையிலே அது நடந்தால் நம்மை வாட்டி வசக்கி விடும் என்பது தான் உண்மை.

பெண்ணே,
நீ தான் என் உயிர் என்றேன்!
நீ தான் என் வாழ்கை என்றேன்!
நீ தான் என் சொந்தம் என்றேன்!


ஆனால் இறுதியில்........
என் தாய் தான் உயிர் என்றாய்!
என் தந்தை தான் என் வாழ்கை என்றாய்!
என் தனயன் தான் என் சொந்தம் என்றாய்!

உன் கரம் பிடிக்க நான் வழி என்னவென்றேன்............
ஆனால்,
உன்னை விட்டு பிரிய வழி சொன்னாய்.............

வீட்டார் எதிர்த்தாலும்,
உற்றார் வெறுத்தாலும்,
நான் உனக்கு தான்,என்று சொன்னது வெறும் உதடு தானோ?

கண்ணால் பேசினாய்.............ரசித்தேன்..........
கடிதத்தில் பேசினாய்.............மகிழ்ந்தேன்............
பாசம் காட்டினாய்..............உணர்ந்தேன்............


ஆனால் இப்போது...................


வெறுப்பை ஏன் கொட்டுகிறாய்??????????
நான் அழ வேண்டும் என்றா???????????

உனக்காக எத்தனையோ செய்தேன்...........


ஆனால்,


நான் அழுவதில் தான் உனக்கு இன்பம் என்றால்..........
அதையும் செய்கிறேன்,என் வாழ்நாள் முழுதும்.............

நான் உன்னை பிரிந்தாலும் உன் ஞாபகங்களுடனே வாழ்வேன் இறுதி வரை..........

Tuesday, November 10, 2009

சரித்திர நாயகனின் சரித்திரம்.................


கமல்ஹாசன் திரையுலகில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகள் ஆகி விட்டதல்லவா? இந்த 50 ஆண்டுகளில் அவர் நடித்த தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்கள் எத்தனை? வாங்கி பட்டங்கள் என்னென்ன? என்பது உள்ளிட்ட ஒரு பெரும் பட்டியலை பிலிம்நியூஸ் ஆனந்தன் வெளியிட்டுள்ளார். அதன்படி கமல்ஹாசன் இதுவரை 221 படங்களில் நடித்திருக்கிறார். இதில் 114 தமிழ் படங்களும், 17 தெலுங்கு படங்களும், 37 மலையாள படங்களும், 16 இந்தி படங்களும், 3 கன்னட படங்களும், ஒரு வங்காள மொழி படமும் அடங்குகிறது. மேற்குறிப்பிட்ட 188 படங்களும் கமல் ஹீரோவாக நடித்த படங்கள். இது தவிர கவுரவ வேடங்களில் தமிழில் 21 டங்களிலும், மலையாளத்தில் 4 படங்களிலும், தெலுங்கு - கன்னடத்தில் தலா 3 படங்களிலும் நடித்திருக்கிறார். ஆக மொத்தம் 221 (188 + 33) படங்களில் கமல் நடித்திருக்கிறார். கலைமாமணி, பத்மஸ்ரீ, டாக்டர் உள்ளிட்ட பட்டங்களை பெற்றிருக்கும் கமல் வாங்கிய விருதுகளுக்கு அளவே இல்லை..............

கமல் பெற்ற விருதுகளின் எண்ணிக்கையை பற்றி இந்த வலைபகுதியில்......
குறிப்பிடப்பட்டுள்ளது.................

Monday, November 2, 2009

மொபைலில் மென்பொருள் டவுன்லோட் செய்வது எப்படி?



இப்போது மொபைலில் புதுமையான மற்றும் வித்யாஷமான சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ண வேண்டுமானால், கிளிக் செய்யுங்கள்.அதில் தேடல் கருவியில் உங்களுடைய மொபைல் மாடல் எண்ணை கொடுத்து தேடுங்கள்.அனைத்து வகையான மொபைலிற்கும்,சாப்ட்வேர் இதில் உள்ளது.


இப்போது நோக்கியா மொபைலிற்கான சாப்ட்வேர் வேறு இணைப்பிலும் கிடைக்கும்.அதனை பார்க்க வேண்டுமானால்,கிளிக் செய்யுங்கள்.


எனக்கு பிடித்தமான இரண்டு வலைபகுதியை உங்களுக்கு அறிமுக படுத்தியுள்ளேன் மேலும் உங்களுக்கு தெரிந்தவற்றை எனக்கு jerinrjn@gmail.com
தெரிய படுத்துங்கள்.

Saturday, September 12, 2009

அலுவலுகத்தில் தூங்குவது எப்படி???????????




பல பல வினோதமான புகை படங்களை நாம் பார்த்திருக்கிறோம்................
ஆனால் இது முற்றிலும் மாறுபட்ட ஓன்று.எப்படி என்று கேட்டால்,ஒருவன் அலுவலுகத்தில், உயர் அதிகாரி தன்னை பார்க்காத வண்ணம் எவ்வாறு தூங்க வேண்டும் என்பதை அழகாக காட்ட பட்டுள்ளது.

நான் கூகிள் தேடல் கருவியில் நுழைந்து பார்க்கும் போது இந்த புகை படங்கள் எனக்கு கிடைத்தது.அதில் பல கோணங்களில் படங்கள் போட பட்டிருந்தது,ஆனால் உங்களுக்காக இரண்டு கோணங்களை இதில் இணைத்துள்ளேன்.

நான் கண்டு வியப்படைந்த இந்த புகைப்படத்தினை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.
இந்த புகைபடத்தினுடைய கருத்துக்களை எழுதுங்கள்.............

Tuesday, September 1, 2009

இந்தியா அணியில் மீண்டும் டிராவிட்???????

இந்தியா அணி டோனி தலைமையில் மிகவும் சிறப்பாக ஆடி வருவது எல்லோருக்கும் தெரியும்முங்க................ஆனா இப்போ பெரிய குழப்பதை ஏற்படுத்தி இருக்காங்க நம்முடைய இந்திய அணியின் நிர்வாகம்.
என்னவென்று கேட்டால் டிராவிட் மறுபடியும் கழம் இறங்க உள்ளார் என்னும் செய்தி தான்.டோனி ட்வென்டி-ட்வென்டி-இல் மிகவும் கேவலமாக விளையாடி பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தினர் என்பது இன்னொரு புறம் இருக்கட்டும்.

முன்பெல்லாம் டோனி வந்தாலே சிக்ஸர் மழையாகவே இருக்கும்.ஆனால் இப்போது மிகவும் பொறுமையாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்து கொண்டு இருகின்றார்.அவருடைய ஆட்டத்தையே குறை சொல்லும் கூட்டம் பலர் உண்டு.அந்த விளையாட்டின் பிண்ணனியத்தை யாரும் புரிந்து கொள்வதில்லை.

சரிங்க இப்போ நான் சொல்ல வந்தது என்னன்னா,டோனிக்கே இந்த நிலம அப்படினா டெஸ்ட் விளையாடுவது போல் ஒரு நாள் போட்டியிலும் விளையாடி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, பார்ப்பவர் கண்ணில் ரத்தம் வர வைக்கும் திராவிடின் நிலை தான் என்ன என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்களேன்.ரன் ஏதும் எடுக்காமலே நின்று தினருவர்.இப்படி ஒரு மட்டை அடி வீரர் நம்முடைய இந்திய அணிக்கு தேவையாங்க?????????????????

கன்யாகுமரிக்கு அழகு சேர்க்கும் திருவள்ளுவர் சிலை



"இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈ.டுபடுவதும், திருவள்ளுவரை பற்றி எழுதுவதும் ஒன்றுதான் " என்பதை நானறியாதவனல்லன்.முன்னூற்று ஐம்பத்து நான்கு குறட்பாக்களைக் கொண்டு குறளோவியம் எழுதி முடித்தபிறகு ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களுக்கும் உரை எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பு அவருள் இருந்ததை நாம் காண முடிகிறது.
வள்ளுவருக்கு இணையான மேதை இன்று இல்லை என்றும் முன்னர் இருந்ததில்லை என்றும் நாளை தோன்றப் போவதில்லை என்றும் சூளுரைக்கலாம். திருவள்ளுவருக்குப் பெருமை சேர்கிறதோ இல்லையோ பேச்சாளரின் வாய் வீச்சு தொடரும்போது அவர் மெத்தப் படித்த மேதாவி என்பதைச் சபை ஏற்றுக்கொள்ளும்படி ஆகிவிடும்.

அப்படியாக தமிழ் இதயங்களில் பெரும் இடத்தை பிடித்த திருவள்ளுவர் கன்னியாகுமரி-இல கம்பீரமாக காட்சி அழித்து கொண்டு இருகின்றார்.
இந்த வள்ளுவர் சிலையின் மொத உயரம் 133 அடி,ஒரு அதிகாரத்திற்கு ஒரு அடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த சிலைக்கான கற்கள் சிறுதாமூர்,பட்டுமளைகுப்பம் மற்றும் அம்பாசமுத்ரம் ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வர பட்டவை.
திரு வள்ளுவர் சிலைக்கு வரும் பார்வையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருகின்றனர்.திருவள்லுவலலுவர் சிலை இருபதினால் தான் கன்னியாகுமரி கடலிற்கு அழகு என்று சொன்னால் மிகை ஆகாது.

Sunday, August 30, 2009

சிரித்து வாழ பழகு....................


மனிதனின் வாழ்கையில் சோகங்கள் வருவதுண்டு,இன்பங்கள் வருவதுண்டு,பல தர பட்ட பிரச்சனைகள் வருவதுண்டு.இப்படி பட்ட பல சூழ்நிலையில் மனிதன் சுழன்று கொண்டு இருக்கின்றான் என்பது தான் உண்மை.ஆனால் இவையனைத்தும் தாண்டி,அனைத்து விசயங்களுக்கும் சிரித்து பழகியவன் தான் வாழ்கையில் சாதிக்க முடியும்.

எதிரியை பார்த்து சிரித்து பார்,அவன் பகையை மறந்து விடுவான்.நண்பனை பார்த்து சிரித்து பார்,அவன் நட்பு மீண்டும் அதிகரிக்கும்.ஆனால் தனிமையில் மட்டும் சிரிக்காதே,உன்னை பைத்தியம் என்றே ஒதுக்கி விடுவார்கள்.

சிரித்து வாழ வேண்டும் என்பதை திரைபடங்களில் கூட பல முறை சுட்டி காட்டி இருக்கிறார்கள்.
Dr.எம்.ஜி.ஆர் அவர்கள் "சிரித்து வாழ வேண்டும்,பிறர் சிரிக்க வாழ்ந்திராதே"என்று பாடிய வரிகள் இதற்கு ஒரு எடுத்துகாட்டு.

சிரிப்பை போல் நல்ல மருந்து உலகில் இது வரை கண்டுபிடிக்கவில்லை என்பதும் உண்மை."வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்"என்ற கூற்றே இதற்க்கு சாட்சி.எப்ப்படி பார்த்தாலும் சிரித்து வாழ்ந்திட வேண்டும்,இல்லை என்றால் சிரிக்க பழக வேண்டும்.

Saturday, August 29, 2009

என்,வலைபகுதியின் அறிமுகம்..........

நான் வலைபகுதிக்கு என்னுடைய அறிமுகத்தை காட்டி சில மாதங்களே ஆகின்றன.நான் முதலில் விரும்பி பார்க்கும் ஒரே பகுதி www.orkut.com மட்டும் தான்.அதில் எனககு கூகிள் உரையாடல் என்று சொன்னால் மிகவும் பிடித்த ஓன்று.
அப்போது தான் எனக்கு கிடைத்தது என் பக்கங்கள்
என்ற வலைபகுதி.அதனை பார்த்து எனக்கும் இதில் நுழைய வேண்டும் என்ற ஆசை வந்தது.அதன் பின்பு அந்த வலைபகுதியின் பதிவரை தொடர்பு கொண்டு பல விசயங்களை விவாதித்தேன்.அப்போது அவர் கூறிய படி நானும் செயல் பட்டு இப்போது தான் படி படியாக முன்னேறும் வைப்பு வந்து கொண்டிருகின்றது.


எனது குருவாக திகழ்பவரின் பெயர் சுரேஷ் குமார்.
இவர் தற்போது வலைசரம்
என்ற வலைபகுதியில் ஒரு வார காலமாக ஆசிரியராக பணியாற்றி கொண்டிருக்கிறார்.

Friday, August 28, 2009

தமிழ்நாட்டின் சிறப்பு........


இந்தியா நாட்டில் இயற்கை வழம் மிகுந்த மாநிலம் தமிழ்நாடு.சென்னை முதல் கன்னியாகுமரி வரை இயற்கையின் அழகை நாம் ரசிக்க முடிகிறது.

"என்ன வழம் இல்லை இந்த திருநாட்டில்" என்ற கூற்றிற்கு இணங்க தமிழ்நாட்டில் எந்த வழதிற்கும் குறை பாடில்லாமல் காணப்படுகிறது.

சென்னை தொழில் ரீதியில் சிறந்து காணப்படுகிறது.முக்கடலும் முத்தமிடும் கன்னியாகுமரி-இல் நெல் சாகுபடியில் சிறந்து காணப்படுகிறது.

இதற்கும் இடையில் தேவையான அழவில் விவசாயம் நடைபெறுகிறது.மக்கள் அன்றாட வாழ்கையில் உழைத்து,ரத்தம் சிந்தி விவசாயத்தை கவனித்து வருகிறார்கள்.

தமிழ்நாடை பொறுத்த வரை எந்த விதத்திலும் தலை ஓங்கி காணபடுகிறது என்பது தான் உண்மை.

Thursday, August 27, 2009

யானையின் அட்டகாசம்............


கேரளா மாநிலத்தில் ஒரு யானை தனது பாகனை அடித்து,துன்புறுத்தி அவனை கொலை செய்த காட்சியினை தத்ரூபமாக படம் பிடித்துள்ளனர்.
ஒரு கோவில் விழாவில் பங்கேற்பதற்காக வந்த யானை திடீரென்று மதம் பிடித்து,அங்கு திரழாக நின்று கொண்டிருந்த மக்களை அலறி அடித்து ஓட செய்து,தனது பாகனை கொலையும் செய்தது.இந்த சம்பவம் கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது போன்று சம்பவம் கேரளாவில் பல முறை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த காட்சியினை மட்டும் தான் ஒருவர் தன் வீடியோ கேமரா மூலமாக பதிவு செய்து அதை வெளியிட்டுள்ளார்.அதனை நானும் உங்களுக்காக என்னுடைய வலைபகுதியில் பதிவு செய்துள்ளேன்.நீங்களும் அந்த கோர சமத்துவத்தை பாருங்கள்.

Thursday, August 20, 2009

விழிதெழு இளைஞர் இயக்கம்



இது மும்பையில் இளைஞர்களை கொண்டு துவங்கப்பட்டுள்ள இயக்கம். இவ்வியக்கத்தின் நோக்கம்:- இளைஞர்களை சமூக நற்பணிகளில் ஈடுபடுத்தி சமூக அக்கறை வரவழைப்பது. வீணாக சீரழிந்து போகும் இளைஞர்களின் ஆற்றலை ஒன்றுதிரட்டி சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்பை மேற்கொள்வது.
மும்பையில் விழித்தெழு இயக்கத்தின் தோழர்களின் கடும் முயற்சியாலும், உண்மையான அரசியல் கலக்காத தமிழ் இன உணர்வாலும், சாதி மதம் கடந்து ஒட்டு மொத்த தமிழினமும் கலந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தாலும், மக்களின் உள்ளத்தில் உள்ள விருப்பத்தை சரியாக புரிந்து கொண்டதாலும் தோழர்கள் தமிழர்களை தமிழ்ச்சாதி என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுத்தனர்.அறிவிப்பு வெளியான உடனேயே, மக்களின் ஆதரவும்,எதிர்பார்ப்பும், தொலைபேசி வாயிலாகவும்,நேரடியாகவும் தெரிவிக்கப்பட்டது. பல தொண்டு நிறுவனங்களும், தன்னலம் கருதாத சமூக ஆர்வலர்களும் தங்களுடைய பங்களிப்பும் இதில் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் நீர் விநியோகம், மோர் விநியோகம் போன்ற உதவிகளை செய்வதாக கூறினர். தோழர்களும் தமிழர்களின் ஒருங்கிணைப்பு கருதி ஒப்புக் கொண்டனர். முன்னேற்பாடாக தோழர்கள் குறுஞ்செய்தி வாயிலாகவும், இணையம் வாயிலாகவும் விளம்பரம் செய்தனர். தன்னலமற்ற தமிழின உணர்வாளர்கள் தானாகவே முன்வந்து தங்கள் ஆதரவை செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தும், விளம்பர பதாகைகளில் விளம்பரம் செய்தும், போராட்ட ஏற்பாடு உதவி என தங்கள் ஆதரவை பதிவு செய்திருந்தனர்.

Friday, July 10, 2009

கலக்கும் சூர்யா







சூர்யா தனது படங்களை இப்போது மிகவும் நேர்த்தியாக கொடுத்து வருகிறார்.


சமீபத்தில் இறங்கிய அவருடைய படங்கள் அனைத்தும் வெற்றியை கண்டுள்ளது.


அனைத்து தரப்பில் உள்ள ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்து கொண்டு இருக்கிறார்.


இவர் வெற்றிக்கு ஜோதிகா தான் காரணமா என

திரைப்பட துறையினர் வியந்து கொண்டு இருக்கின்றனர்.


சமீபத்திய வாரணம் ஆயிரம் மற்றும் அயன் திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.......................
இன்னும் மென்மேலும் உயரட்டும் சூர்யா புகழ்.................

வேட்டைக்காரன் அலசல்...................


விஜய் தனது நாற்பத்தி ஒன்பதாவது படமான வேட்டைக்காரன் இன்னும் ஒரு மாதத்தில் ரிலீஸ் ஆக போகும் இந்த நிலையில்,புதிய வதந்தியை கிளப்பியுள்ளார் விஜய்.என்னவென்றல் அவர் அரசியலுக்கு தாவ உள்ளாராம்............

(படம் நடித்து சம்பாதிக்கிறது போதாது போல)

புத்திசாலி நாய்.................



ஐந்து அறிவு இருந்தாலும் நாய் நன்றி உள்ளது..........
இந்த புகைபடத்தில் வீட்டில் இருக்கும் பெண் தன் புருசனுக்கு தெரியாமல் வேறு தொடர்பு வைத்திருகிறாள்,அது புருசனுக்கு தெரிய வருகிறது.எப்படியெனில் அந்த புத்திசாலி நாய் ஜன்னலில் உள்ள துணியை இழுத்து காட்டி கொடுகிறது.............
அந்த நாய்க்கு இருக்கும் அறிவு,அந்த பெண்ணுக்கு இல்லாமல் பொய் விட்டது.............
புகைப்படத்தை உற்று கவனியுங்கள்,அப்போது உங்களுக்கே அர்த்தம் புரிந்து விடும்.....................

Wednesday, July 8, 2009

வினோதம் அல்ல.........


இந்த பச்சிளம் குழந்தையின் வாயில் சிகெரட் இருப்பதை பார்த்து வினோதம் என்று நினைக்காதீர்.இது நம் வாழ்க்கைக்கு உதாரனமான ஓன்று.எப்படியெனில் போதை பழக்கத்திற்கு அடிமை ஆனவர்கள் தங்களை மட்டுமல்லாமல்,பின் சந்ததியர்களையும் கெடுக்கிறார்கள்.
போதை என்பது நமக்கு மட்டுமே கிடைக்கும் இன்பமாய் இருக்கட்டும்,பிறருக்கு விழைவிக்கும் தீமையாய் அமைய வேண்டாம்.................

என் நண்பனின் பட்டம்


இந்த புகைபடத்தில் இருப்பது என் நண்பன் வினோ.
இந்த கால கட்டத்தில் அனைவரும் ஆங்கிலம் பயில வேண்டும் என்று எதிர் பார்த்து கண்டு இருக்கிறார்கள்.ஆனால் இவனோ கற்றல் தமிழ் தான் கற்பேன் என்று தமிழில் கற்று கொண்டு இருக்கிறான்.இவனை போன்றவர்களால் தான் இன்னும் தமிழ்நாடு பெருமை அடைந்து கொண்டு இருக்கிறது.
உண்மையில் இவனை போன்றோர்களுக்கு தான் கொடுக்க வேண்டும் பட்டம்,பரிசுகள் அனைத்தும்..........

தமிழ் நாட்டின் அவலம்

தமிழ் நாடு எல்லாவற்றிலும் பின்தங்கியே காண படுகிறது....
இந்தியாவின் பசுமை மாநிலமான தமிழ் நாடு இப்போது தலை கீழாக மாறி வருகிறது.இதற்கு காரணம் கலாச்சார மாற்றம்.விவசாயிகளின் எண்ணிக்கை நாள்களுக்கு நல்ல குறைந்து கண்டே வருகிறது.இப்போது உள்ள தலைமுறை அனைவரும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.தலைவர்கள் இவற்றை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.இந்த நிலை தொடர்ந்தால்,இன்னும் பதினைந்து ஆண்டுகளில் தமிழ் நாடு பசி பட்டினியால் வாடும் என்பது வல்லுனர்கள் கருத்து.
படித்து வேலை கிடைக்காமல் இருக்கும் இழைநர்கள் நினைத்தால்இந்த அவல நிலையை போக்க முடியும்.
அப்படி ஒரு கலாம் வரும் என்று தான் அனைவரின் எதிர்பார்ப்பு...........
என்று நிலைக்குமோ இந்த கனவு????????????????????

காதலின் உச்சகட்டம்

உன் அன்பு மட்டுமே என்
நேசிப்பு ...
உன் வார்த்தை மட்டுமேஎன்
கவிதை ...
உன் பார்வை மட்டுமேஎன்
வெட்கம் ...
உன் ஸ்பரிசம் மட்டுமேஎன்
உணர்வு ...
உன் சுவாசம் மட்டுமேஎன்
மூச்சு...
உன் இதயம் மட்டுமேஎன்
இருப்பிடம்...
உன் கோபம் மட்டுமேஎன்
கண்ணீர் ...
உன் வேதனை மட்டுமேஎன்
வலிகள்...
நீ மட்டுமே
"நான் "...
உன் பிரிவு மட்டுமேஎன்
மரணம் !!!"

Tuesday, July 7, 2009

வாழ்க்கை முறை...............

அன்பாய் இரு
ஆனால்,
அன்பிற்கு அடிமை ஆகி விடாதே!!!
விட்டுகொடு
ஆனால்,
கொள்கையை விடாதே!!!
கவலையை மறந்து விடு
ஆனால்,
கடந்து வந்த பாதையை மறந்து விடாதே!!!

Saturday, May 2, 2009

கருணாநிதியும்,ஜெயலலிதாவும்,இலங்கை தமிழர்களின் எதிரிகள்.

கருணாநிதியும்,ஜெயலலிதாவும்,இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் நடத்தி கொண்டு இருக்கிறார்கள்.இது பற்றி விஜயகாந்த் கூறுகையில்,
இலங்கைப் பிரச்னை குறித்து ஜெயலலிதா தமிழீழம் ஒன்று தான் தீர்வு எனப் பேசி வருகிறார். அவர் இவ்வளவு நாட்கள் இதுகுறித்து மவுனமாக இருந்துவிட்டு தற்போது பேசுவது தேர்தலுக்காக தான். இலங்கையில் போர் நிறுத்தம் அறிவித்தது அங்கு தமிழர்கள் முழுவதும் கொலை செய்யப்பட்டுவிட்டனர். இனியும் குண்டு போட்டால் அங்குள்ள சிங்களர்கள் தான் இறந்து போவார்கள். எனவே தான், போர் நிறுத்தம் அறிவித்துள்ளனர். இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது, தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக நடத்திய நாடகம் தான். கருணாநிதி அணிந்து வரும் மஞ்சள் துண்டு குரு பகவானைக் குறிக்கும்.

DMDK எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை. மக்கள் மற்றும் ஆண்டவனோடு மட்டும் தான் கூட்டணி அமைத்துள்ளோம். லோக்சபா தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தேர்தலில் கூட்டணி அமைப்பது கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்து, பின் பங்கு போட்டுக்கொள்வதற்காக தான். மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்க விரும்பாததால் தான் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் மக்களோடு கூட் டணி வைத்து தேர்தலை . இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
'கருணாநிதிக்கு நடிக்கவும் தெரியும்': வறுமையும், ஊழலும் இரண்டற கலந்தது தான் தி.மு.க., ஆட்சி. இலங்கைப் போர் நிறுத்தம் குறித்து கருணாநிதி ஒரு நாடகத்தை காலை 6 மணிக்குத் துவங்கி 12.30 மணிக்கு முடித்துள் ளார். போர் நிறுத்திவிட்டதாகக் கூறி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அதாவது, காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக உள்ளது கருணாநிதியின் உண்ணாவிரத நாடக அரங்கேற்றம். சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக இருந்தால் ரத்தக் கொதிப்பு இருப்பதைப் பார்க்க எதற்கு அங்கு டாக்டர்கள்? கருணாநிதிக்கு கதை வசனம் மட்டுமே தெரியும் என்று பார்த்தேன். ஆனால், நன்றாக நடிக்கவும் செய்கிறார்.

போர்வை போர்த்தி எட்டு ஏர் கூலர்கள் வைத்துக் கொண்டு வாடினேன், வதங்கினேன் என்றால் நியாயமா? தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் இலங்கைத் தமிழர்களை வைத்து ஏமாற்றுவேலை நடத்தி வருகின்றனர்.இலங்கைப் பிரச்னை குறித்து ஜெயலலிதா தமிழீழம் ஒன்று தான் தீர்வு எனப் பேசி வருகிறார். அவர் இவ்வளவு நாட்கள் இதுகுறித்து மவுனமாக இருந்துவிட்டு தற்போது பேசுவது தேர்தலுக்காக தான். இலங்கையில் போர் நிறுத்தம் அறிவித்தது அங்கு தமிழர்கள் முழுவதும் கொலை செய்யப்பட்டுவிட்டனர். இனியும் குண்டு போட்டால் அங்குள்ள சிங்களர்கள் தான் இறந்து போவார்கள். எனவே தான், போர் நிறுத்தம் அறிவித்துள்ளனர். இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது, தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக நடத்திய நாடகம் தான். கருணாநிதி அணிந்து வரும் மஞ்சள் துண்டு குரு பகவானைக் குறிக்கும்.

DMDK Party captain rocks

நம்முடைய வருங்கால முதல்வர் கேப்டன் விஜயகாந்த் இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் போட்டி இட்டு வெற்றி காண உள்ளார்.அவர் தீய சக்திகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
இன்று தே.மு.தி.க தமிழகத்தில் தனி பெரும்பான்மையில் முதல் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இதற்கு காரணம் விஜயகாந்தின் கூட்டணி தான் காரணம்.கூட்டணி என்றால் மக்களுடனும் தெய்வத்துடனும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.நாளைய சமுதாயத்தின் ஒழி விழகான விஜயகாந்த் மக்களுக்காக பல நற்திட்டங்களை வகுத்துள்ளார்.அவைகள் பின்வருமாறு.

* கர்நாடகத்தில் உள்ள நீர்வளத்தைக் கொண்டே இரு மாநிலங்களின் தேவையையும் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை தே.மு.தி.க., மத்திய அரசின் மூலம் மேற்கொள்ளும்.
* கேரள மக்களின் அச்சத்தை போக்கி, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி தமிழகத்துக்கு பயன்பட வழிவகை காணப்படும்.
* ஆந்திர மாநில பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்க வகை செய்யப் படும்.
* கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய பாடுபடும்.
* உலகத்தில் வசிக்கும் தமிழர்களின் உரிமை பறிக்கப்படும் போது, அவர்கள் நலனுக்காக மத்திய அரசை தே.மு.தி.க., நிர்பந்திக்கும்.
* தமிழக எல்லையில் உள்ள கேரளா சொந்தம் கொண்டாடும் கண்ணகி கோவிலை, தமிழகத்துக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
* தேசிய நதிநீர் இணைப்புக்கு முன்னுரிமை கொடுத்து, அதற் கான உடனடி முயற்சியில் ஈடுபடும்.
* சேது சமுத்திர திட்டத்தை மீனவர்களுடன் கலந்து பேசி, எந்த மதத்தினரும் புண்படாத வகையில் மாற்றி அமைத்து செயல்படுத்துவோம். இத்திட்டத்தில் நடந்த ஊழல் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர தே.மு.தி.க., முயற்சி எடுக்கும்.
* மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
* விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த நடவடிக்கை மற்றும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம்.
* புதுச்சேரி, மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு கேப்டன் அறிக்கை விடுத்துள்ளார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting