Saturday, September 12, 2009

அலுவலுகத்தில் தூங்குவது எப்படி???????????




பல பல வினோதமான புகை படங்களை நாம் பார்த்திருக்கிறோம்................
ஆனால் இது முற்றிலும் மாறுபட்ட ஓன்று.எப்படி என்று கேட்டால்,ஒருவன் அலுவலுகத்தில், உயர் அதிகாரி தன்னை பார்க்காத வண்ணம் எவ்வாறு தூங்க வேண்டும் என்பதை அழகாக காட்ட பட்டுள்ளது.

நான் கூகிள் தேடல் கருவியில் நுழைந்து பார்க்கும் போது இந்த புகை படங்கள் எனக்கு கிடைத்தது.அதில் பல கோணங்களில் படங்கள் போட பட்டிருந்தது,ஆனால் உங்களுக்காக இரண்டு கோணங்களை இதில் இணைத்துள்ளேன்.

நான் கண்டு வியப்படைந்த இந்த புகைப்படத்தினை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.
இந்த புகைபடத்தினுடைய கருத்துக்களை எழுதுங்கள்.............

Tuesday, September 1, 2009

இந்தியா அணியில் மீண்டும் டிராவிட்???????

இந்தியா அணி டோனி தலைமையில் மிகவும் சிறப்பாக ஆடி வருவது எல்லோருக்கும் தெரியும்முங்க................ஆனா இப்போ பெரிய குழப்பதை ஏற்படுத்தி இருக்காங்க நம்முடைய இந்திய அணியின் நிர்வாகம்.
என்னவென்று கேட்டால் டிராவிட் மறுபடியும் கழம் இறங்க உள்ளார் என்னும் செய்தி தான்.டோனி ட்வென்டி-ட்வென்டி-இல் மிகவும் கேவலமாக விளையாடி பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தினர் என்பது இன்னொரு புறம் இருக்கட்டும்.

முன்பெல்லாம் டோனி வந்தாலே சிக்ஸர் மழையாகவே இருக்கும்.ஆனால் இப்போது மிகவும் பொறுமையாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்து கொண்டு இருகின்றார்.அவருடைய ஆட்டத்தையே குறை சொல்லும் கூட்டம் பலர் உண்டு.அந்த விளையாட்டின் பிண்ணனியத்தை யாரும் புரிந்து கொள்வதில்லை.

சரிங்க இப்போ நான் சொல்ல வந்தது என்னன்னா,டோனிக்கே இந்த நிலம அப்படினா டெஸ்ட் விளையாடுவது போல் ஒரு நாள் போட்டியிலும் விளையாடி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, பார்ப்பவர் கண்ணில் ரத்தம் வர வைக்கும் திராவிடின் நிலை தான் என்ன என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்களேன்.ரன் ஏதும் எடுக்காமலே நின்று தினருவர்.இப்படி ஒரு மட்டை அடி வீரர் நம்முடைய இந்திய அணிக்கு தேவையாங்க?????????????????

கன்யாகுமரிக்கு அழகு சேர்க்கும் திருவள்ளுவர் சிலை



"இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈ.டுபடுவதும், திருவள்ளுவரை பற்றி எழுதுவதும் ஒன்றுதான் " என்பதை நானறியாதவனல்லன்.முன்னூற்று ஐம்பத்து நான்கு குறட்பாக்களைக் கொண்டு குறளோவியம் எழுதி முடித்தபிறகு ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களுக்கும் உரை எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பு அவருள் இருந்ததை நாம் காண முடிகிறது.
வள்ளுவருக்கு இணையான மேதை இன்று இல்லை என்றும் முன்னர் இருந்ததில்லை என்றும் நாளை தோன்றப் போவதில்லை என்றும் சூளுரைக்கலாம். திருவள்ளுவருக்குப் பெருமை சேர்கிறதோ இல்லையோ பேச்சாளரின் வாய் வீச்சு தொடரும்போது அவர் மெத்தப் படித்த மேதாவி என்பதைச் சபை ஏற்றுக்கொள்ளும்படி ஆகிவிடும்.

அப்படியாக தமிழ் இதயங்களில் பெரும் இடத்தை பிடித்த திருவள்ளுவர் கன்னியாகுமரி-இல கம்பீரமாக காட்சி அழித்து கொண்டு இருகின்றார்.
இந்த வள்ளுவர் சிலையின் மொத உயரம் 133 அடி,ஒரு அதிகாரத்திற்கு ஒரு அடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த சிலைக்கான கற்கள் சிறுதாமூர்,பட்டுமளைகுப்பம் மற்றும் அம்பாசமுத்ரம் ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வர பட்டவை.
திரு வள்ளுவர் சிலைக்கு வரும் பார்வையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருகின்றனர்.திருவள்லுவலலுவர் சிலை இருபதினால் தான் கன்னியாகுமரி கடலிற்கு அழகு என்று சொன்னால் மிகை ஆகாது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting