Friday, December 31, 2010

மதவாதிகளின் அட்டகாசம் இன்னும் ஓயவில்லை...

                            எத்தனை தலைவர்கள் மாறினாலும்,எத்தனை ஜன்மம் எடுத்தாலும்,மாறாத ஒன்றாக இருக்கிறது இந்த மத பிரச்சனை.மனிதன் மாறுகிறான்,ஆனால் மதவாதிகள் என்னும் மிருகங்கள் மாறாமல் அப்படியே தான் இருக்கிறார்கள்.
                           இந்து,கிறிஸ்தவம்,இஸ்லாமியம் என்ற வேறுபாடு இல்லாமல் எப்போது தான் இந்த உலகம் மாறும் என்று எதிர்பார்க்கும் மக்கள்  மத்தியில்,மதவாதிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.
                           கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதியான கொற்றிகோடு என்னும் கிராமத்தில்,C.S.I தேவாலயம் அமைந்துள்ளது.இந்த திருச்சபைக்கு பல கிளை சபைகளும் உண்டு.அதில் ஒன்றான எரிச்சமாமூடுவிளை  ஆலயம் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சிறிதாக கட்டி துவங்க பட்டது.நாள் போக்கில் அந்த சபையின் குடும்பத்தினர் அதிகரித்து புதிய ஆலயம்   கட்டுவதற்காக  மேற் கூரையை பிரித்தனர்.
                           அப்போது தான்  பிரச்சனை ஆரம்பித்தது.என்னவென்றால்,வேறு மத தொழுகை இடம் இருப்பதற்கு  அருகாமையில் இன்னொரு மதத்தின் தொழுகை இடத்தை அமைக்க விட மாட்டோம் என்று மதவாதிகள் தங்கள் ஆக்ரோசத்தை வெளிக்காட்டினார்கள்.இதன் விழைவாக போலீஸ் ஸ்டேசனில் வழக்கு தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

                            இப்படியாக பல ஆண்டுகள் பிரச்சனை நடந்து கொண்டிருந்தத வேளையில்,நேற்று முன்தினம் ஆலயம் கட்டுவதற்கான ஆணை கிடைத்தது.இதை அடுத்து சபை உறுப்பினர்கள் ஆலயத்தை கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.அந்த வேளையில் மதவாதிகள் எதிர்ப்பை மீண்டும் வெளிக்காட்டி,ஆலயத்தில் பணி செய்து கொண்டிருந்தவர்களை கற்களால் தாக்கினார்கள்.

                            இதனால் அந்த பகுதியில் பெரிய மத பிரச்சனை கிளம்பியது.சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து கொற்றிகோடு பகுதியில் உள்ள அனைத்து தரத்து கிறிஸ்தவர்களும் ஒருங்கிணைந்து ஆலயத்தை கட்ட வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.அதன் பெயரில் மாவட்ட கலெக்டர் வந்து அப்பகுதியை முற்றுகையிட்டார்.

                            இப்படியாக பல போராட்டத்தின் மத்தியில் கலெக்டரிடம் இருந்து ஆலயம் கட்டுவதற்கான ஆணை கிடைத்தது.

                           ஆணை கிடைத்த உடன் அங்கு குவிந்திருந்த  போலீஸ் காரர்களின் பாதுகாப்பில் ஆலயம் கட்டப்பட்டது.

                          ஒரு ஆலயம் கட்டுவதற்கு இவ்வளவு  பிரச்சனையா?இது எனது ஊரில் நடந்த உண்மை.இதே போல் பல  ஊர்களில் மதவாதிகளின் அட்டகாசம் தொடர்கிறது.இவர்களுக்கு ஒரு முடிவு வந்தால் தான்,உலகில் அனைத்து மதத்தினரும் நிம்மதியாக  வாழ முடியும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

Monday, December 13, 2010

துபாய்க்கும் சவுதிக்கும் பிரச்சனை எதனால்?

துபாயின் முக்கிய இடமான ஜுமேரியா கடலின் உள் அமைந்துள்ளது "BURG AL ARAB" ஹோட்டல்.இது பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கிலேயர்களால் கட்டப்பட்டது.இது துபாயின் ராஜா ஷேய்க் முஹம்மத் பின் ரஷித் அல் மக்தூம் என்பவரின் சொந்த கட்டிடம்.

                இந்த கட்டிடத்தை தான் துபாய் அரசு மேன்மையாக போற்றி கொண்டு இருந்தது. துபாயில் உள்ள வாகனங்களில் இந்த கட்டிடத்தின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என்பது தான்,அரசின் ஆணை.

              இது கடலுக்குள் அமைந்துள்ளதால் அரபு நாடான சவுதியிலிருந்து  பார்க்கும் போது துல்லியமாக தெரிகிறது.ஆனால் அங்கிருந்து பார்க்கும் போது  கிறிஸ்துவ சின்னமான சிலுவையை போல் இந்த கட்டிடம் காட்சி அழிக்கிறது.துபாய் முஸ்லிம் நாடு என்பதால் வேறு மதத்தை சுட்டி காட்டும் இந்த கட்டிடத்தை அகற்றுமாறு சவுதி அரசர் "அப்துல்லா" கேட்டு கொண்டுள்ளார்.

       
             அதற்க்கு  துபாய் அரசர் மறுப்பு தெரிவித்துள்ளார்.ஆகவே துபாயில் உள்ள வாகனங்கள் சவுதி செல்லும் போது அவர்களுடைய வாகனங்களை கொண்டு இடித்தும்,தகராறு செய்தும் வந்தார்கள்.ஏனென்றால்,துபாய் வாகனங்களில் இந்த கட்டிடத்தின் புகைப்படம் இருப்பதினால்.

           இத்தகைய பிரச்சனைகள் கிளம்பிய உடன் இந்த கட்டிடத்தின் புகைப்படத்தை உடனே நீக்குமாறு துபாய் அரசு உத்தரவு பிறப்பித்தது.இருப்பினும் இந்த கட்டிடத்தை அகற்றுவதற்கும்,வேறு இடம் வாங்குவதற்கும்,அதில் வேறு ஹோட்டல் அமைப்பதற்கும் எவ்வளவு செலவு ஆகுமோ எல்லாவற்றையும் தானே ஏற்று கொள்கிறேன் ஆனால் இந்த கட்டிடத்தை அப்புற படுத்துங்கள் என்று,சவுதி அரசர் கேட்க, துபாய் அரசரோ முடியாது என்று ஒரே வார்த்தையில் முடித்துள்ளாராம்.


           இன்னும்  இந்த பிரச்னை ஓயாமல் நடந்து கொண்டு இருக்கிறது.பிரச்சனை சுமூகமாக தீர்ந்தால் அனைவருக்கும் நல்லது.இல்லையென்றால் இதன் காரணமாக மத கலவரம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.


பணி சுமை காரணமாக புதிய பதிவுகள் இடுவதில் தாமதம் ஏற்படுகிறது.இருப்பினும் வாரம் ஒரு பதிவு போடலாம் என ஆசை படுகிறேன்.
துபாயில்  என் பயணம் தொடர உங்களுடைய வாழ்த்துக்கள் அவசியம்...
மறக்காமல் உங்கள் கருத்துகளை எழுதி செல்லுங்கள்...

Tuesday, November 16, 2010

"Drop Down Menu" எவ்வாறு தயார் செய்வது?

"Drop Down Menu" என்றால் என்ன என்ற கேள்விக்கு பதில் கீழே கொடுக்க பட்டுள்ளது,பாருங்கள்,



எப்படி இந்த மெனுவை தயார் செய்வது என்று பார்க்கலாம்,
கீழே கொடுக்க பட்டுள்ள நிரலை copy செய்து,
Dashboard-->Design-->Page Element-->Add Gadjet-->Html சென்று Paste செய்யவும்.

<select onChange="document.location.href=this.options[this.selectedIndex].value;">
<option value="0" selected>Blog Archive</option>
<option value="Links 1">Text 1</option>
<option value="Links 2">Text 2</option>
</select>
 இதில் சிவப்பு நிறத்தில் இருக்கும் எழுத்துக்களை நீக்கி விட்டு,உங்களுக்கு விருப்பமான பகுதியின் Link-ஐ டைப் செய்யவும்,

இதில் நீல நிறத்தில் இருக்கும் எழுத்துகளை நீக்கி விட்டு,நீங்கள் கொடுக்கும் link-இன் தலைப்பை டைப் செய்யுங்கள்.

எடுத்து காட்டாக,


<select onchange="document.location.href=this.options[this.selectedIndex].value;">
<option value="http://www.jerin.co.in" selected />Home
<option value="http://www.kotticode.com" /> Kotticode
<option value="http://www.luckystar.kotticode.com" />  Luckystar
</select>


என்று கொடுத்தால்,






இவ்வாறு உங்களுடைய மெனு தயார் ஆகும்.

இதிலே மூன்று Link மட்டும் தான் கொடுக்க பட்டுள்ளது.மேலும் Link நீங்கள் வைக்க விரும்பினால்,
</select> என்ற வார்த்தையின் முன்பு,



<option value="Links 3">Text 3</option>


என்று  டைப் செய்து கொள்ளுங்கள்.பின்பு மாற்றங்களை சேமித்து கொள்ளுங்கள்.இப்போது உங்களுக்கு "Drop Down Menu" தயாராகி விடும்.


புடிதிருந்தால் பின்னூட்டம் எழுதுங்கள்...

Saturday, November 13, 2010

பிளாக்கர் "Required Field Must Not Be Blank" என்ற பிழையை சரி செய்யும் வழி...

                                  நாம் பிளாக்கரில் புதிதாக Widjet சேர்க்கும் போது,அதனுடைய தலைப்பு கொடுக்கவில்லை என்றால் "Required Field Must Not Be Blank" என்ற பிழை  வருகிறது.இந்த பிழை தோன்றுவதன் காரணமாக நமக்கு அந்த widjet- ஐ நம்மால் சேமிக்க முடியாமல் போய் விடுகிறது.

                                   அதனால் நாம் ஏதாவது ஒரு தலைப்பினை கொடுத்து சேமித்து விடுகிறோம்.அந்த பிழையை திருத்துவதற்கான வழியை நாம் கீழே பார்க்கலாம்.
                                   இந்த பிழையை திருத்த ஒரு எழிமையான வழி உள்ளது.எப்படியெனில் ஒரு html கோடிங்கை மட்டும் கொடுத்தால் போதும்.


<!-- -->

தலைப்பில் மேலே கொடுக்க பட்டுள்ள கோடிங்கை கொடுத்தால் போதும்,பின்பு சேமித்து கொள்ளலாம்.இப்போது தலைப்பு இல்லாமல் widjet நாம் சேமித்து கொள்ளலாம்.
          
                    <!-- பின் தொடர்க --> என்று நாம் டைப் செய்தாலும்,பின் தொடர்க என்ற எழுத்துக்கள் தலைப்பில் இடம் பெறாது.

                    நீங்களும் முயற்சித்து பாருங்கள்,நிச்சயமாக பயனுள்ளதாய் அமையும்...

நானா வேலைக்கு போகிறேன்?

                                காலை எழுந்து சாபிட்டு கல்லூரி சென்ற காலம் கடந்து போயிற்று.......படித்து முடித்த உடன் வேலைக்கு செல்ல வேண்டுமென்பது பெற்றோர் விருப்பம்,மட்டுமல்லாமல் அனைவரது விருப்பமும் அது தான்.ஆனால் சொந்த ஊரிலே வேலை பார்க்கும் பாக்கியம் சிலருக்கு தான் கிடைகிறது.
                        
                                  நானும் சென்னை,பெங்களூரு,மும்பை என வெளி ஊர்களிலே வேலை செய்து வந்தேன்.இருப்பினும் மாதம் ஒரு முறை ஊருக்கு வருவது எனக்கு புடித்த ஓன்று.அதையே வாடிக்கையாக கொண்டிருந்தேன்.

                                 அதற்கும் வச்சிட்டாங்கப்பா  ஆப்பு.இப்போது துபாய் நாட்டிலே சென்று வேலை பார்ப்பதற்கு  ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.நல்ல வேலை தான், ஆனால் என்ன செய்வது மாதம் ஒரு முறை ஊருக்கு வர முடியாமல் போய் விடும் என்று நினைக்கும் போது தான் மனதில் வருத்தம் வருகிறது.

                                 "சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா" என்று சொல்லி,ஊரையே சுற்றி வந்த நானா இப்போது  துபாயில் வேலைக்கு செல்கிறேன் என்று நினைக்கும் போது கஷ்டமாக தான் இருக்கிறது.

                                இருப்பினும் வேலைக்கு செல்லாமல் சோம்பேறியாக இருக்கும் சிலருக்கு மத்தியில் நானும் வேலைக்கு செல்கிறேன் என்று நினைக்கும் போது உண்மையாகவே சந்தோசம் தான் என் மனதில்.


                               ஆகவே தோழர்களே,என்னை வாழ்த்தி அனுப்புங்கள் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

Monday, November 8, 2010

மொபைலில் ஜி-டாக் வசதிக்கு அருமையான மென்பொருள்...

                           
                                     இப்போது  பலர் ஜி-டாக் மூலம் பேசுவதும்,சாட் செய்வதும் பொழுது  போக்காக கொண்டுள்ளனர்.ஆனால் கணினி  முன்னால் எப்போதும் இருப்பது மிகவும் கடினமான விஷயம் தான்.மொபைலில் இதற்கான மென்பொருளை தரவிறக்கி இப்போது சுலபமாக கூகிள்,யாஹூ,எம் எஸ் என் போன்றவற்றை பயன்படுத்தி மகிழலாம்.

                               mig33,e-buddy   போன்ற மென்பொருள்களை இப்போது பலரும் உபயோகித்து வருகிறார்கள்.இருப்பினும் இந்த மென்பொருள்களை உபயோகிக்கும் போது ஒரு பிரச்னை நம்மால் உணர முடிகிறது என்னவென்றால், மொபைல் மூலம் தான் கூகிள் கணக்கை நிறுவி இருக்கிறோம் என்பதனை எழிதாக சுட்டி காட்டுகிறது.

                               இந்த பிரச்சனையை சரி படுத்தும் முறையில் புதிதாக ஒரு மென்பொருளை உங்களுக்கு தெரிய படுத்துகிறேன்.நம்மில் பலருக்கு இதை பற்றி தெரிந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளன.இருப்பினும் தெரியாத பலரும் நிச்சயமாக இருப்பார்கள்.தெரியாதவர்களுக்கு இந்த பதிவு முக்கியமானதாக அமையும் என நம்புகிறேன்.

                               இந்த மென்பொருளின் பெயர் TALKAUNOUT.இதனை உபயோகிப்பதன் மூலம் நாம் எழிதாக  google,yahoo,msn,கணக்கினை நாம் நிறுவ முடியும்,மட்டுமல்லாமல் நாம் மொபைல் மூலம் தான் இதனை பயன்படுத்துகிறோம் என்பதனை யாராலும் கண்டுபுடிப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

                               இதனை தரவிறக்க "இங்கே சொடுக்குங்கள்"

 உபயோகித்து பாருங்கள்,நிச்சயம் இதனை பயன்படுத்துவீர் என நம்புகிறேன்.

Wednesday, August 11, 2010

பதிவர்கள் சந்திப்பு...

அன்பான பதிவுலக தோழர்கள் அனைவரும் சந்திப்பதற்கான  ஓர் அறிய வாயப்பு...

                                   சுரேஷ்குமார் என்னும் பதிவரின் திருமணம் வருகின்ற 19 -ம் தேதி (19-08-2010) அன்று நடக்க உள்ளது.இந்த திருமணமானது முட்டைகாடு C.S.I சபையில் வைத்து நடைபெறும்.முட்டைகாடு என்பது குமரி மாவட்டம்,தக்கலை அருகே உள்ளது.

                                 நம்முடைய பதிவர் குடும்பத்தில் ஒருவரான சுரேஷ் குமார் அவர்களின் திருமணத்தை, பதிவர்களாகிய நாம் தான் சிற்பிக்க வேண்டும்.பதிவர்கள்  வருவதற்கான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம்.தங்குவதற்கான ஏற்பாடும்,இதர வசதிகளும் செய்துள்ளோம்.

                                  அவருடைய திருமணம் முடிந்த பிற்பாடு குமரியின் குற்றாலம் திற்பரப்பு அருவியில் வைத்து பதிவர்கள் சந்திப்பு நடைபெறும்.

                                 அந்த சந்திப்பில் பதிவுலகில் நண்பர்களாக இருக்கும் நாம் நேரில் நம்முடைய கருத்துக்களை பரிமாறி கொள்ளலாம்.

                                 வெளி நாடுகளில் இருக்கும் நண்பர்கள் நேரில் வர முடியாத காரணத்தினால் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவிக்கலாம்.

                                 சுரேஷ் குமார் அவர்களின் வலைபகுதியை பார்க்க விருப்பம் உள்ளவர்கள்,இங்கே சொடுக்குங்கள். அவர் ஏற்கனவே அழைப்பிதழை பதிவாக வெளியிட்டுள்ளார்,இந்த பதிவை பார்க்க இங்கே சொடுக்குங்கள்.

                                 மேலும் விவரத்திற்கு +919994796659 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழையுங்கள்.இது என்னுடைய தொலைபேசி எண் தான்.

                                  நானும் அவர் ஊரை சார்ந்த பதிவர் என்பதால் மட்டுமல்ல,என்னுடைய வலைபதிவின் குரு என்ற முறையிலும் தான் இந்த அழைப்பை விடுக்கிறேன்.

ஆகவே வாரீர் புதுமண தம்பதிகளை வாழ்த்தி,பதிவர் சந்திப்பை சிறப்பித்து செல்லுங்கள்...

Monday, August 9, 2010

மொபைலில் பதிவுகளை தமிழில் வாசிக்க...

                                  மொபைலில் பதிவுகளை தமிழில் வாசிக்க வேண்டுமென்றால்,மொபைலில் தமிழ் பான்ட் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.தமிழ் வசதி இல்லாத  மொபைலாக இருந்தாலும்,இப்போது தமிழில் பதிவுகளை வாசிக்கலாம்.

                                  என்னுடைய முந்தைய பதிவில் நாகப்பன் என்ற பதிவுலக நண்பர் மொபைலில் தமிழ் மூலம் எவாறு பதிவுகளை வாசிப்பது என்று பின்னூட்டத்தில் கேட்டிருந்தார்...அவருக்கான பதிலை இந்த பதிவில் விளக்க உள்ளேன்...

                                 முதலில் உங்களுடைய மொபைலில் இணைய நண்பனாக இருக்க வேண்டும்.அடுத்த  படியாக ஒபேரா மினி உலாவியை தரவிறக்கி கொள்ளுங்கள்...
ஒபேரா மினி தரவிறக்க உங்களுடைய மொபைலில் இருந்து http://mini.opera.com செல்லுங்கள்...

தரவிறக்கிய உடன்  ஒபேரா மினி அட்ரஸ் பாரில் (address  bar ),

opera:config 

என்று டைப் செய்து ok  பொத்தானை அழுத்துங்கள்.

இப்போது புதிதாக திறக்கும் பக்கத்தில்,

Use bitmap fonts for complex scripts  

என்ற வசதியில் NO   என்று இருந்தால்,YES என்று மாற்றி கொள்ளுங்கள்.
உணகளுடைய மாற்றங்களை சேமித்தும் கொள்ளுங்கள்...

இப்போது உலவியிலிருந்து வெளியேறி மறுபடியும் உள்நுழையுங்கள்...

அவ்வளவு தான் இப்போது உங்களுக்கு விருப்ப பட்ட பதிவுகளை உங்களுடைய மொபைலில் இருந்தே வாசிக்கலாம்...

Sunday, August 8, 2010

நம்முடைய வலைபதிவை மொபைலில் எளிதாக பார்க்க...

                                     இப்போது உள்ள காலகட்டங்களில் பல பேர் மொபைல் போன்களில் இணையத்தை பார்த்து வருகின்றனர்.மொபைல் இணையத்தின் வேகமும் இப்போது '3G' மூலமாக கூடி உள்ளது.

                                    இதன் காரணமாக தான் பலர் மொபைல் மூலமாக பிளாகரை உபயோகித்து வருகின்றனர்.ஆனால் நம்முடைய வலைபகுதி மொபைல் உதவி இல்லாமல் இருந்தால்,நாம் அனைத்து மொபைல் மூலம் பதிவுகளை வாசிக்கும் நண்பர்களையும் இழந்து விடுவோம்.

                                   ஏனென்றால் நம்முடைய தழங்களை மொபைலில் திறக்க முயற்சிக்கும் போது நேரம் அதிகமாக செலவிட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்,அதனால் முதலில் நம்முடைய  தழத்தை மொபைல் நண்பனாக மாற்ற வேண்டும்.

                                  அவ்வாறு மாற்ற நம்முடைய பிளாகர் கணக்கில் உள்நுழைந்து Dashboard>Design>edit html சென்று expand widjet என்பதை கிளிக் பண்ணுங்கள்.அதில் ctrl+F-ஐ அழுத்துங்கள்.

<b:include data='blog' name='all-head-content'/> 

என்னும் நிரலை அதில் காப்பி செய்து பேஸ்ட் செய்து கண்டுபுடித்து அதற்க்கு கீழே,

<meta content='IE=EmulateIE7' http-equiv='X-UA-Compatible'/> 
<b:if cond='data:blog.isMobile'> 
<meta content='width=device-width, initial-scale=1.0, user-scalable=0' name='viewport'/> 
<b:else/> 
<meta content='width=1100' name='viewport'/> 
</b:if> 

என்னும் நிரலை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்...

அவ்வளவு தான் இப்போது மாற்றங்களை சேமித்து கொள்ளுங்கள்.[save templates ]

இப்போது உங்களுடைய வலைபகுதியும் மொபைல் நண்பனாகி விடும்.இதன் மூலமாக மொபைல் மூலம் பதிவுகளை வாசிக்கும் போது மிகவும் வேகமாக இருக்கும்,அதனால் வாசகர்களும் அதிகமாக வாய்ப்புகள் உள்ளது.

முயற்சித்து பாருங்கள் புடிதிருந்தால் பின்னூட்டம் எழுதுங்கள்...

Wednesday, August 4, 2010

காதல் தந்த பிச்சை....

 "படத்தை கிளிக் பண்ணுங்க"
காதல் புனிது,
காதல் இனிது,
இருந்தாலும் காதல் மிக மிக கொடிது!!!

நானும் நீயும் ஓன்று என்றாய்,
நீயே என் வாழ்கை என்றாய்,
கண்ணே என்றாய்,
பொன்னே என்றாய்,

இறுதியில் நீ  யார் என்று கேட்காதது தான் மிச்சம்...


காதலை உணர்ந்தேன் உன்னால்!
அன்பை சுவாசித்தேன் உன்னால்!!

கற்றதை மறக்க செய்தாய்!
கல்வியை புகட்டினாய்!!

உற்றாரை மறக்க செய்தாய்!
புதிய உறவுகளை கொடுத்தாய்!!

ஏன்???  எதற்கு???

இதனையும் செய்தாயே ஏன்? எதற்கு??

உன்னை விரும்பிய பாவமா?

இல்லை,

உன்னை பைத்தியகார தனமாக விரும்பியதின் பலனா?

காதலிக்க அனுமதி தந்தது யார்?
உன் பெற்றோரா?
இல்லை,
உன் உற்றோரா?

இல்லையே!!!

பின்பு ஏன் திருமணதிற்கு மட்டும் அவர்கள்???

காதலிக்கும்  போது இருந்த பாசம்,
உன் திருமணத்தில்  இருக்காது...

நான் கல்லறைக்கு செல்லும் போது இருக்குமா???

நான் கல்லறைக்கு செல்லும் போது இருக்குமா???

உன்னை காதலித்ததற்கு நீ கொடுத்த பிச்சை.......
ஏமாற்றம்! ஏமாற்றம்!! ஏமாற்றம்!!!

Tuesday, August 3, 2010

அழகிய நாட்கள்...

"படத்தை கிளிக் பண்ணுங்கள்"

கடந்து வந்த நாட்கள்...
அது காணாமல் போனது!!!

கடக்கின்ற நாட்கள்...
அது நம்மை வெறுத்து திரும்பியது!!!

வரும் நாட்கள்...
அது தெரியாமல் நின்றது!!!

இப்படி இருக்கும் நாட்கள்,அழகாய் மாறுமா???

ஏன் மாறாது? ஏன் மாற்ற வேண்டும்???

நம்மை வெறுக்கும் உலகை நேசித்து பார்,
அனைவருக்கும் உதவி செய்து பார்,
எந்த காரியத்தையும் முயற்சித்து பார்,
முடியாது என்ற வார்த்தையை வெறுத்து பார்,
சுயநலத்தை வெறுத்து,பொதுநலத்தை பேணி பார்,
பிறர் மீது அன்பை செலுத்தி பார்,

ஏன் மாறாது என்ற கேள்விக்கு பதில் தெரியும்...

நேற்று,இன்று,நாளை,
அது வரும்,செல்லும்,
அதில் நம் பங்கு என்ன என்பதை சிந்திக்க வேண்டாமா???
நாளைய உலகம் நம்மை பற்றி பேச வேண்டாமா???
அனைவரும் நம்மை போற்ற வேண்டாமா???
பிறர் நம் மீதும் அன்பு செலுத்த வேண்டாமா???

இவற்றை யோசித்து பார்,
ஏன் மாறாது என்ற கேள்விக்கு விடை தெரியும்...


இருந்தோம்!!! சென்றோம்!!!
என்றில்லாமல்,

இருந்தோம்!!! சாதித்தோம்!!! சென்றோம்!!!
என்று தான் இருக்க வேண்டும்...


இதை கதையாகவோ? கவிதையாகவோ? பார்க்க வேண்டாம்...
இதில் சொல்ல பட்டிருக்கும் கருத்துகளை மட்டும் மனதில் கொள்ளுங்கள்....

என்றும் அன்புடன் ரா.ஜெரின்...

Monday, August 2, 2010

பிலாக்கரில் நம்முடைய படத்தை தலைப்பில்(favicon) கொண்டு வர வேண்டுமா???

                               தங்களுடைய வலைபகுதியில் FAVICON வைப்பதில் அனைவருக்கும் விருப்பம் இருக்கும்.ஆனால் சிலருக்கு அதற்கான வழிமுறைகள் தெரியாமல் இருப்பதினால் FAVICON வைப்பதில் சிக்கல் ஏற்படும்.

                             நிஜமாங்க,நானும் இவ்வளவு நாள் தெரியாமல் தான் இருந்தேன்.நான் அறிந்த விஷத்தை இப்போது உங்களிடமும் பகிர்ந்து கொள்ள போகிறேன்...
                           நீங்கள் FAVICON வைப்பதற்காக முதலில் உங்களுக்கு புடித்தமான படத்தினை photshop அல்லது GIMP மூலமாக திருத்தி கொள்ளுங்கள்.அந்த படத்தினை 32X32 அளவில் சேமித்து கொள்ளுங்கள்...
  • அடுத்த படியாக நீங்கள் சேமித்த படத்தினை இணைய தளத்திற்கு அனுப்பி url பெற வேண்டும்.
  • அடுத்ததாக உங்களுடைய பிளாக்கர் டாஷ்போர்ட் திறந்து கொள்ளுங்கள்.
  • அதில் design சென்று edit html சொடுக்குங்கள் இப்போது திறக்கும் பக்கத்தில் Expand Widjet -ஐ  சொடுக்குங்கள்.
  • அடுத்த படியாக ctrl + f அழுத்துங்கள். அதில் வரும் find பகுதியில்

<b:skin><![CDATA[/*  என்னும் கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.
"படத்தை கிளிக் பண்ணுங்கள்"
 <b:skin><![CDATA[/* இதற்கு மேலே,


<link href='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQiRCl1vzrgTEqGeKB-MZ227_L-I3PC9H7aomt3wHCTW89QcceDfbOiN0VMMWKEDE6cYV4RoGoBoOo8C8yTACSMyqUBuUTpOgUSy6ZlJE_M9SpZk_cgCtNcEDWNJvSZbx-5YfXyOK2xuo/s1600/rainbow.png' rel='shortcut icon'/>

என்னும்   கோடிங்கை  காப்பி செய்து பேஸ்ட் செய்து விடுங்கள்...
"படத்தை கிளிக் பண்ணுங்கள்"
  • இதில் சிவப்பு  நிறத்தில்   குறிக்க பட்டுள்ள எழுத்துகளை நீக்கி விட்டு உங்களுடைய படத்தின் URL -ஐ கொடுங்கள்.


  • இப்போது   நீங்கள் மாற்றங்களை சேமித்து கொள்ளலாம்(Save Template).


அவ்வளவு தான்  வேலை முடிந்தது....உங்களுடைய வலைபகுதியை preview செய்து பாருங்கள்.

உங்களுடைய படத்தையே தலைப்பில் கண்டு மகிழலாம்.

முயற்சி செய்து பாருங்கள்...புடிதிருந்தால் பின்னூட்டம் எழுதுங்கள்...

Sunday, August 1, 2010

நண்பர்கள் தின சிறப்பு பதிவு...

ஆகஸ்ட் முதல் ஞாயிறு  என்றாலே அனைவருக்கும்  நாபகத்துக்கு வருவது நண்பர்கள் தினம் தான்.ஆனால் அதற்கு பின்னால் ஒரு பெரிய கதையே இருக்குதாம்.

அது என்ன  கதை என்றால்..............



1935 வது வருடம்,அமெரிக்க அரசாங்கம் ஆகஸ்ட் முதலாவது சனி கிழமை அன்று ஒரு வாலிபரை தவறுதலாக கொன்று விட்டனர்.அதற்கு அடுத்த தினமான ஞாயிற்று கிழமை அன்று அந்த வாலிபருடைய நண்பன்,தன் உயிர் நண்பனின் பிரிவை தாங்க முடியாமல் தன் உயிரையும் மாய்த்து கொண்டார்.

அந்த வாலிபருடைய ஞாபகார்த்தமாக அனைத்து வருடமும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்று கிழமையை நண்பர்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தது  அமெரிக்க அரசாங்கம்.நண்பர்கள் தினம்  73 வது வருடமாக இந்த ஆண்டு கொண்டாட படுகிறது.

நானும்  இந்த தினத்தில் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்து தெரிவிப்பதில்  பெருமை  கொள்கிறேன்..................

நண்பர்கள் தின வாழ்த்துகள்.....................

Wednesday, July 28, 2010

என்னுடைய புதிய வலைபகுதி ஆரம்பம்...


அன்பு தோழர்களே!

இந்நாள் வரை நான் http://www.jerinrjn.blogspot.com உபயோகித்து வந்தேன்.இப்போது என்னுடைய பெயரிலே புதிய வலைபகுதி வாங்கியுள்ளேன்.

Tuesday, July 20, 2010

பழமைக்கு திரும்பும் தமிழகம்...........



இன்றைய கால கட்டத்தில் உலகம் பழமைக்கு திரும்புகிறது என்பதற்கு தமிழகம் ஒரு எடுத்து காட்டாக விழங்குகிறது.எப்படியெனில்,

சினிமா,
சினிமாவை எடுத்து கொண்டால் பழைய கதைகள்,திரைப்பட பெயர்கள் மற்றும் பாடல்கள் முதலியவற்றை மாற்றி புதிய விதத்தில் வெளியிடுகிறார்கள்.

உடை,
உடையை எடுத்து கொண்டால் பழைய உடைகள் தான் இப்போது புது பொலிவாக மலிந்து வருகின்றன.................

சினிமா,உடை இவை இரண்டை காட்டிலும் மிகவும் பழமைக்கு திரும்பியது என்வென்றால் மின்சாரம்.
மின்சாரத்தை பழமைக்கு கொண்டு சென்ற பெருமை தமிழ் நாட்டிற்கு மட்டுமே உள்ளது.எப்படிஎன்றால்,

பழங்காலத்தினர் மின்சார வசதி இல்லாமல் மண்ணெண்ணெய் விழக்கில் தங்களது பணிகளை செய்து வந்தனர்.

அனால் இப்போது மின்சார வசதிகள் இருந்தும் மண்ணெண்ணெய் விழக்கில் பணிகளை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

காரணம் "மின்வெட்டு"

இந்த நிலை தொடர்ந்தால் மிக எழிதில் தமிழகம் பழங்காலத்திற்கு திரும்பி விடும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

"பழமை தங்கம் போன்றது"(Old Is Gold)

Monday, July 19, 2010

நோக்கியா மொபைல்களை பார்மட் செய்வது எப்படி? முறை 2 மற்றும் முறை 3




உங்களுடைய மொபைல் மிகவும் மெதுவாக செயல்படுகிறதா?

உங்களுடைய மொபைலில் வைரஸ் புகுந்துள்ளதா?

கவலையை விடுங்கள்..........................
இப்போது உங்களுடைய நோக்கியா N சீரீஸ் மொபைலை எளிதாக பார்மட் செய்து விடலாம்..........................
பார்மட் செய்வதற்கு மூன்று முறைகள்........................................

முதல் முறையை முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்..................

முறை : 2,( Hard Format)

1 : முதலில் மொபைலை அணையுங்கள்,

2 : *#7370# ஆகிய பொத்தான்களையும் அமுக்கி புடிக்க வேண்டும்,

3 : இந்த பொத்தான்களை அமுக்கிய படியே இப்போது மொபைலை ஆண்(on) பண்ணுங்கள்.

4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந்த உடன்,அந்த பொத்தான்களை விடுவியுங்கள்.


முறை : 3,(Soft Reset)

1 : முதலில் மொபைலை அணையுங்கள்,

2 : *#7780# ஆகிய பொத்தான்களையும் அமுக்கி புடிக்க வேண்டும்,

3 : இந்த பொத்தான்களை அமுக்கிய படியே இப்போது மொபைலை ஆண்(on) பண்ணுங்கள்.

4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந்த உடன்,அந்த பொத்தான்களை விடுவியுங்கள்.

இப்போது உங்கள் மொபைல் பார்மட் ஆகிவிடும்........................

மீண்டும் புதிதாக அனைத்து அமைப்புகளையும் அமைத்து கொள்ளுங்கள்.................

இப்போது நீங்கள் வைரஸ் இல்லாத மொபைலை உபயோகிக்கலாம்.........................

Friday, April 9, 2010

நோக்கியா மொபைல்களை பார்மட் செய்வது எப்படி??????????

உங்களுடைய மொபைல் மிகவும் மெதுவாக செயல்படுகிறதா?

உங்களுடைய மொபைலில் வைரஸ் புகுந்துள்ளதா?

கவலையை விடுங்கள்..........................

இப்போது உங்களுடைய நோக்கியா N சீரீஸ் மொபைலை எளிதாக பார்மட் செய்து விடலாம்..........................

பார்மட் செய்வதற்கு மூன்று முறைகள்........................................

முறை 1:

1 : முதலில் மொபைலை அணையுங்கள்,

2 : மூன்று பொத்தான்களை அமுக்கி பிடிக்க வேண்டும்.(பச்சை நிற பொத்தான், '*' பொத்தான், '3' எண் பொத்தான்)

3 : இந்த மூன்று பொத்தான்களையும் அமுக்கிய படியே இப்போது மொபைலை ஆண்(on) பண்ணுங்கள்.

4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந்த உடன்,அந்த மூன்று பொத்தான்களையும் விடுவியுங்கள்.

இப்போது உங்கள் மொபைல் பார்மட் ஆகிவிடும்........................

மீண்டும் புதிதாக அனைத்து அமைப்புகளையும் அமைத்து கொள்ளுங்கள்.................

இப்போது நீங்கள் வைரஸ் இல்லாத மொபைலை உபயோகிக்கலாம்.........................

முறை : 2, மற்றும் முறை : 3, ஆகியவை அடுத்த பதிவில் எழுதுகிறேன்......................

Tuesday, January 26, 2010

கேப்டன் டிவி அறிமுகம்.................


ஜனவரி மாதம் 14 தேதி அன்று,கேப்டன் டிவியினுடைய லோகோ முதல் முறையாக அறிமுகம் செய்ய பட்டது.
அதனை தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அறிமுக படுத்தினார்.


இந்த தொலைகாட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் திரைப்படங்களும்,இரவு மெகா தொடர்களும் ஒழிபரப்பாகும்.தமிழில் மொழிமாற்றம் செய்த ஆங்கில திரைப்படங்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமை மதியம் ஒழிபரப்பாகும்.


குழந்தைகள்,முதியவர்கள்,இளைஞர்கள், என அனைவரும் பார்க்கும் விதங்களில் நிகழ்ச்சிகளை தொகுத்துள்ளனர்.



இதன் சோதனை ஒழிபரப்பானது மார்ச் 15 முதல் ஏப்ரல் 13 முடிய ஒழிபரப்ப படும்.


ஏப்ரல் 14 தேதி முழுமையாக மக்களின் பார்வைக்கு படைக்க படும்.


இந்த தொலைக்காட்சி INSAT 4B செயற்கைக்கோள் மூலமாக ஒழிபரப்ப படுகிறது.



"எது எப்படியோ கேப்டன் டிவியில் செய்திகள் மட்டும் பார்க்க முடியாது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது"

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting