Friday, November 4, 2011

பேஸ்புக் கருத்து பெட்டியை பிளாக்கரில் நிறுவுவது எப்படி?

                நம்மில் அதிகமானோர் பேஸ்புக்கில் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருவது உண்மை தான்.அந்த பேஸ்புக் வாயிலாக நம் பிளாகர்யையும் இணைப்பதற்கு பல வழிகள் உள்ளன.அந்த வழிகளில் ஓன்று தான் பேஸ்புக் கருத்து பெட்டி....

                இந்த கருத்து பெட்டியின் உபயோகம் என்று பார்த்தால்,நம்முடைய கருத்துகள் அனைத்தும் நேரடியாக பேஸ்புக்கில் சென்றடையும்....இதன் மூலம் நம்முடைய நண்பர்கள் அனைவரும் நம் தளத்தை வந்து பார்பதற்கு எதுவாக இருக்கும் என நம்புகிறேன்....

                இப்போது எவ்வாறு இந்த கருத்து பெட்டியை நிறுவலாம் என்று பார்க்கலாம்..

  1. முதலில் நாம் www.facebook.com/developer என்னும் தளத்தில் சென்று அதில் நமக்கென புதிய அப்ளிகேசன் துவங்க வேண்டும்...
அதற்காக "create new application" என்னும் லிங்கினை கிளிக் செய்யவும்...



 2. அதில் நம்முடைய தளத்தின் பெயரை டைப் செய்யவும்...







 3. பின்பு agree மற்றும் continue என்ற லிங்கினை கிளிக் செய்யவும்...






  4. Continue என்னும் லிங்கினை அழுத்திய பின்பு புதிய பக்கம் திறக்கும்....அதில் Application ID என்ற பெயரில் உங்களுக்கான ID கொடுக்க படும்.அதை குறித்து வைத்து கொள்ளுங்கள்....



  5. இப்போது நீங்கள் www.blogger.com என்ற தளத்தில் நம்முடைய கணக்கை திறந்து,

               Templates--->Edit HTML--->Proceed--->Expand Widjet Template

  கிளிக் செய்து அதில் ctrl + f அழுத்தி <data:post.body/>  என்று டைப் செய்யவும்...


  6. <data:post.body/> என்பதின் கண்டுபிடித்து அதன் கீழ் 

<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
  <div id='fb-root'/>
  <script>
  window.fbAsyncInit = function() {
  FB.init({appId: &#39;YOURAPPID&#39;, status: true, cookie: true,
  xfbml: true});
  };
  (function() {
  var e = document.createElement(&#39;script&#39;); e.async = true;
  e.src = document.location.protocol  +
  &#39;//href=connect.facebook.net/en_US/all.js&#39;;
  e.async = true;
  document.getElementById(&#39;fb-root&#39;).appendChild(e);
  }());
  </script>
  <fb:comments/>
  </b:if>


என்னும் நிரலை Copy  செய்து paste செய்யவும்...

  முக்கியமாக, "YOURAPPID" என்பதை மாற்றி,உங்களுடைய பேஸ்புக் அப்ளிகேசன் ID- யை டைப் செய்யவும்.


  7.  இப்போது மாற்றங்களை சேமித்து கொள்ளுங்கள்....


குறிப்பு, <data:post.body/> என்பது மூன்று  அல்லது நான்கு இடங்களில் இருக்கும்,அதில் நான்கு இடங்களிலும்,இந்த நிரலை paste செய்து பாருங்கள்....


   இப்போது உங்களுக்கான பேஸ்புக் கருத்துபெட்டி தயாராகி விடும்....

    

Friday, October 28, 2011

மலையாள திரைப்படங்களின் இன்றைய நிலை....

                     தமிழ் திரைப்படங்களை விமர்ச்சிப்பதில் வல்லுனர்கள் மலையாளிகள் என்பது எல்லோரும் அறிந்ததே...ஆனால் அப்படி பட்ட மலையாள சினிமாவில் இப்படி பட்ட ஒரு நிலைமை வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்...

                    கடந்த அக்டோபர் 26ம் தேதி கேரளத்தில் வெளி வந்த "கிருஷ்ணனும் ராதையும்" திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது...

                    இத்திரைபடத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால்,நடிப்பு,இயக்கம்,தயாரிப்பு,இசை,பாடல் வரிகள்,சண்டை பயிற்சி,கலை,பாடகர்,கதை,திரைக்கதை,வசனம்,உடைகள் போன்ற 16 பங்குகளை "சந்தோஸ் பண்டிட்" என்பவர் ஏற்றுள்ளார்.ஒரே நபர் காமெராவை தவிர மற்றுள்ள எல்லாவற்றையும் செய்து ஒரு திரைபடத்தை வெளியிட்டுள்ளார்.

                     கிருஷ்ணனும் ராதையும் திரைப்படம் கேரளா திரைப்பட உலகில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.இது வரை நடந்த அணைத்து காட்சிகளும் திரையரங்கு நிரம்பி வழிகிறது என்பது தான் இப்போதைய நிலவரம்.இந்த திரைபடத்தின் டிரைலரை(Trailer ) கீழே கொடுக்க பட்டுள்ள லிங்கில் காணலாம்...

                              "இங்கே கிளிக் செய்யுங்கள்"

                       இந்த வீடியோவை பார்த்த பின்னர் உங்களுக்கே தெரியும் இந்த திரைப்படம் எப்படி இருக்கும் என்று?இப்படியும் ஒரு திரைபடத்தை மலையாளிகள் தினமும் சென்று பார்த்து  கொண்டு தான் இருக்கிறார்கள் என்றால் அதை போன்ற ஒரு பைத்தியகார தனம் வேறு ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம்.

                     இதை போன்ற திரைபடத்தை தமிழர்கள் பார்த்தால்,என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும்....

                     இப்படியும் ஒரு திரைபடத்திற்கு,,,வரவேற்ப்பு கொடுக்கும் மலையாளிகளுக்கு தமிழ் சினிமாவின் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.......


இப்படி இருக்கிறது மலையாள திரைபடத்தின் இன்றைய நிலை....

Thursday, August 25, 2011

கணினியில் rundll32.exe கோப்பின் பிரச்சனைகள்...


                                           விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தில் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு கோப்பு தான் rundll32.exe. எனவே இந்த கோப்பு இயங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு பிழை செய்தி கிடைக்கிறது. இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த கோப்பு குறித்த சந்தேகங்கள் தெளிவாகும்.

                                         rundll32.exe கோப்பு நம் கணணியில் டாஸ்க் மேனேஜரில் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். RAM நினைவகத்தில் இந்த கோப்பு தங்கி இருந்து மற்ற கோப்புக்கள் செயல்பட உதவிடும். ஒன்று அல்லது இரண்டு புரோகிராம்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால் இந்த கோப்பின் பெயர், பிரச்சினை குறித்த பிழை செய்தியில் அடிபடுவது இயற்கையே. கணணி இயங்க அடிப்படையான டி.எல்.எல் கோப்புக்கள் இந்த ரன் டி.எல்.எல் 32 கோப்பு வழியாக இயங்குகின்றன.

                                        ஒரு டி.எல்.எல் கோப்பை நேரடியாக இயக்க முடியாது. இ.எக்ஸ்.இ அல்லது காம் கோப்புக்கள் இயக்கப்படுவது போல டி.எல்.எல் கோப்புக்கள் இயங்காது. விண்டோஸ் சிஸ்டத்திற்கு இவற்றை இயக்க இன்னொரு கோப்பு தேவைப்படுகிறது. அதுதான் rundll32.exe கோப்பு. 32 பிட் டி.எல்.எல் கோப்புக்களை இது எடுத்து இயக்குவதால் இந்த பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.

                                         இப்படி அடிப்படைச் செயல்பாட்டிற்கு இது அரிய பங்கினை அளிப்பதால் சில கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் கணணியில் rundll32.exe என்ற கோப்பு கெட்டுப் போய் விட்டதென்று செய்தி கொடுத்து சரியான rundll32.exe கோப்பு வேண்டும் என்றால் கிளிக் செய்திடவும் என ஒரு லிங்க் தரும். இதில் கிளிக் செய்தால் அந்த கோப்பானது தரவிறக்கம் செய்யப்படும். ஆனால் அது கெடுதலை விளைவிக்கும் புரோகிராமாக இருக்கும். எனவே இது குறித்து வரும் செய்திகளை பார்த்தால் சற்று கவனமாகச் செயல்பட வேண்டும்.

Sunday, May 1, 2011

கிராமம் தாழ்ந்ததும்,நகரங்கள் உயர்ந்ததுமா???

              இன்றைய தமிழகத்தில் பெரிதும் பாதிக்க பட்டுள்ள ஒரு விஷயம் என்னவென்றால், மின்வெட்டு...
            

            இந்த மின்வெட்டு காரணமாக பல தர பட்ட மக்களும் பாதிக்க பட்டுள்ளார்கள்.இதில் பெரிதும் பாதிக்க பட்டுள்ளது கிராமபுற மக்கள் தான்.

             11,300 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் தமிழகத்தில் இப்போது வெறும் 10,214 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது...மின் பற்றாகுறை காரணமாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்வெட்டு துவங்க பட்டுள்ளது...

            இதில் மின்சாரம் அதிகமாக செலவு செய்வது நகர வாசிகள் என்று அனைவராலும் சொல்ல முடியும்,கிராமங்களில் வசிக்கின்றவர்கள் மிகவும் குறைவான மின்சாரமே உபயோகித்து வருகிறார்கள்...

           இப்படியான சூழ்நிலையில் நகரங்களில் ஒரு மணி நேரமும்,கிராமங்களில் மூன்று மணி நேரமும் மின்வெட்டு இருக்கிறது...

          ஏழைகளை காப்பாற்றுவோம்,கலங்கவிடமாடோம்,கண்ணீரை துடைப்போம் என்று அரசியல்வாதிகள் மேடைக்கு மேடை பேசி கொண்டிருந்தனர்...

        ஏழைகள் பலர் இருப்பது  கிராமங்களில் தான் என்பதை அந்த அரசியல்வாதிகளான குள்ளநரிகளுக்கு புரியவில்லையா  இல்லை தெரியவில்லையா???

       சொகுசாக வாழ்பவன் அங்கே சொகுசாக வாழ்கிறான்...கஷ்ட படுகிறவன் இங்கே கஷ்ட பட்டுக்கொண்டே இருக்கிறான்...இந்நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் உழைப்பவர்கள் நிலை கேள்வி குறி ஆகி விடும் என்பதில் எந்த மாற்று கருத்தும்  இல்லை....

     நகரங்களில் வாழ்பவர்கள் மட்டும் என்ன தெய்வ பிறவிகளா? அவர்களுக்கு மட்டும் உல்லாச வாழ்கையும் கிராம புற ஏழை மக்களுக்கு கொடுமையான வாழ்க்கையா???

சிந்தியுங்கள்....சிந்தியுங்கள்....

        இன்று தொழிலாளர் தினம்,ஆனால் உண்மையிலே உழைக்கும் எல்லா  தொழிலாளர்களுக்கு சமீப காலமாக எல்லா தினங்களும் துக்ககரமான நாட்களாக தான் அமைகிறது....

       மின்சாரம் என்பது உபயோக படுவது நகரங்களில் உள்ள பெரிய தொழிற்சாலைகளுக்கு மட்டுமல்ல .கிராமங்களில் பலர் செய்கின்ற வீட்டு தொழிலுக்கும் தான் தேவைபடுகிறது...

       மின்சார பற்றாகுறை என்றால் ஒத்துகொள்கிறோம்,அனால் அதை சரி செய்வதற்கு நகரத்திற்கும்,கிராமத்திற்கும் ஒரே அழவிலான மின்வெட்டை இன்று முதல் பகிருங்கள்...

              நான் சற்று ஆவேசத்துடன் இந்த தொழிலாளர் தினத்தன்று என்னுடைய பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.....அனால் இதை வாசிக்கும் நண்பர்களே சற்று சிந்தியுங்கள்....இதற்க்கு நம் பதிவர்கள் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை......

                     

Friday, April 29, 2011

இன்றைய தமிழகம் ................

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்கும் என்னிடம்

ஒருவர் கேட்டார் - எதற்காக இதனை கஷ்டப்படுகிறாய்?

நான் கேட்டேன் - கஷ்டப்படாமல் எப்படி வாழ்கையை ஓட்ட முடியும்?

அவர் சிரித்த படி சொன்னார் - என்னை பார்,

1 ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிடுவேன்.

போரடித்தால் வண்ணத் தொலைகாட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்.

உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,

உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!

உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்?

முதலாமவர் சிரித்த படி கேட்டார் - நான் யார் தெரியுமா?

தமிழ் நாட்டுக் குடிமகன்

என் நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்

சமைப்பதற்கு கேசும் அடுப்பும் இலவசம்,

பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்,

குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சை இலவசம்

எதற்காக உழைக்க வேண்டும்?

நான் கேட்டேன் - உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?

பலமாக சிரித்த படி உரைத்தார்,


மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 இலவசம் சிகிச்சையுடன்,

குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாளர் பள்ளியில்,

படிப்பு சீருடையுடன் , மதிய உணவும் இலவசம் முட்டையுடன்,

பாடப்புத்தகம் இலவசம்,படிப்பும் இலவசம் , பள்ளி செல்ல பஸ் பாசும் இலவசம்,

தேவை என்றால் சைக்கிளும் இலவசம்.

பெண் பருவம் அடைந்தால் திருமண உதவி தொகை ரூபாய் 25000 இலவசம்,


1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம் ,

தேவை என்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,

மகள், பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்,

நான் எதற்கு உழைக்க வேண்டும்!!!

வியந்து போனேன் நான்!!!

என் உயிர் தமிழகமே எத்தனை காலம் இந்த நிலை தொடரும்?

இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு ,

ஓன்று கையூட்டு , மற்றொன்று பிச்சை !!!


இதில் நீ எந்த வகை ? எதை எடுத்து கொள்வது ?

உழைக்காமல் உண்டு சோம்பேரியாகிறாய் - இலவசம் நின்று போனால் உன் நிலை !!!

உழைப்பவர் சேமிப்பை களவாட தலைபடுவாய் !!!

இதே நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால்

அமைதி பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை

இன்னும் வெகு தொலைவில் இல்லை .

தமிழா விழிதெழு - உழைத்திடு

இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு

தமிழகத்தை தரணியில் உயர்த்திடு !!!

நாளைய தமிழகம் நம் கையில் ,

உடன்பிறப்பே சிந்திப்பாயா !!!

மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!!

Monday, April 25, 2011

பிளாக்கரில் அழித்த பின்னூட்டத்தை மறைப்பது எப்படி?

                      நாம் புதிதாக பதிவுகள் வெளியிட்ட பின்பு அந்த பதிவுனுடைய வரவேற்பினை நோக்கி இருப்பது வழக்கம்...
         
                     குறிப்பாக வாக்குகளையும்,பின்னூட்டத்தையும் மிகவும் எதிர்பார்க்கிறோம்.அதற்க்கு ஏற்ற பின்னூட்டங்களும் வாக்குகளும் கிடைக்கும் போது நாம் மகிழ்ச்சி அடைகிறோம்,இது தான் இயற்கை...

                    அனால் மறுமொழி எழுதும் போது சிலர் வரம்புகளை மீறுவதாலும்,தவறுதலாக மறுமொழி எழுதுவதாலும்,குறிப்பிட்ட பின்னூட்டத்தை நான் அழிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ள படுகிறோம்.

                   அவ்வாறு நாம் பின்னூட்டத்தை அழிக்கும் போது,அந்த பின்னூட்டம் இருந்த இடத்தில் "This post has been removed by the author" என்ற வாசகம் காணப்படும்...

                   இந்த வாசகங்கள் இருப்பதினால் நாம் பின்னூட்டத்தை அழித்திருப்பது அனைவருக்கும் தெரிய வருகிறது.அதனால் இந்த வாசகங்களை மறைக்க எழிய வழியை கீழே பார்க்கலாம்..

   1.பிளாக்கர் கணக்கில் உள்நுழைந்து Dashboard ---> Layout ---> Edit HTML செல்ல வேண்டும்.

 2.அதில் "Expand Widjet Templates" -யை கிளிக் செய்ய வேண்டும்...

 3.Ctrl + F -யை கிளிக் செய்து கீழே கொடுக்க பட்டுள்ள நிரலை காப்பி, பேஸ்ட் செய்து, கண்டுபுடிக்க வேண்டும்...

<b:loop values='data:post.comments' var='comment'> 

  4.இவற்றை கண்டுபுடித்த பின்பு,இந்த நிரலின் கீழே ,


<b:if cond='data:comment.isDeleted'>

<b:else/>
 என்னும் நிரலை காப்பி பேஸ்ட் செய்ய வேண்டும்...

 5.இப்போது " <b:loop " என்னும் எழுத்துகளுக்கு மேலே,


</b:if>

என்னும்  நிரலை காப்பி பேஸ்ட் செய்ய வேண்டும்...

 6.இப்போது இந்த மாற்றங்களை அனைத்தையும் சேமித்து கொள்ளுங்கள்...

                         இனி நாம் எப்போது பின்னூட்டங்களை அழித்தாலும் அதில் வரும் வாசகங்கள் மறைந்து விடும்...

                        


Saturday, April 23, 2011

பிளாக்கர் டெம்ப்லேட்(Template) அழிந்து போனால் திரும்ப பெறுவதற்கான வழிகள்...

               பதிவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல்,தங்களுடைய வலைபகுதியை அழகான டெம்ப்லேட் மூலமாகவும்,விட்ஜெட்கள் மூலமாகவும் அலங்கரிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்....

              ஆனால் அவ்வாறு டெம்ப்லேட் மற்றும் விட்ஜெட் சேர்க்கும் போது சில பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டி வருகிறது.சில சமயங்களில் விட்ஜெட் சேர்க்கும் போது நம்முடைய டெம்ப்லேட் அழிந்து(Corrupt) விடுகிறது...

             இந்த பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது என்று தெரியாமல் நம்மில் பலர் திணறி கொண்டு இருப்போம்...

           அந்த பிரச்சனையை சரி செய்வதற்காக மிகவும் எழிதான ஒரு வழியை இந்த பதிவில் காணலாம்.


 1.முதலில் Dashboard--->Design--->Edit HTML செல்ல வேண்டும்.

 2.அதில் Expand Widjet Template என்பதை இம்முறை கிளிக் செய்ய வேண்டிய அவசியம் இல்லை...

 3.Ctrl + F என டைப் செய்து கீழே உள்ள நிரலை காப்பி செய்து பேஸ்ட் செய்து கண்டுபுடிக்க வேண்டும்...

 <b:widget id='Blog1' locked='true' title='Blog Posts' type='Blog'/>

 4.இதில் " Blog1" என்று சிவந்த நிறத்தில் குறிக்க பட்ட எழுத்துக்களை மட்டும் மாற்றி  "Blog2" என டைப் செய்ய வேண்டும்.

 5. இப்போது மாற்றங்களை சேமித்து கொள்ளுங்கள்...

                         இப்போது நாம் இழந்த நம்முடைய வலைபகுதி மீண்டும் நமக்கு திரும்ப கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்...

                        நாம் முன்னர் சேமித்து வைத்திருந்த வாக்கு பட்டை மற்றும் இதர விட்ஜெட்கள் அனைத்தும் அழிந்து விடும்.அதனை மீண்டும் நாம் தரவிறக்கி கொள்ளலாம்...

                        நாம் தவறுதலாக எப்போதாவது இதே போல் பிரச்சனையில் சிக்கி கொண்டால் இந்த பதிவு முக்கியமானதாக இருக்கும் என நம்புகிறேன்...


                 

Friday, April 22, 2011

நம் பதிவுகளை பேஸ்புக்கில் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது எப்படி?

                                   நம்முடைய பதிவுகளை திரட்டிகளின் மூலம் பலருக்கும் அறிமுகபடுத்துகிறோம்,இப்போது பேஸ்புக் மூலமாகவும் பகிர்ந்து கொள்கிறோம் ஆனால் பேஸ்புக்கில் நாம் ஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.
                                   ஆனால் இப்போது நம்முடைய பதிவுகளை நம்முடைய வலைபகுதியில் பதிவிட்ட உடனே  பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள வேண்டுமானால்,மிகவும் எழிதான முறைகளை கையாண்டால் போதும்.

1.முதலில் நம்முடைய பேஸ்புக் கணக்கில் உள்நுழைய வேண்டும்.

2.அதில் நம்முடைய புகைப்படத்தின் கீழ் உள்ள Notes-யை திறந்து கொள்ளுங்கள்.

3.அதில் "WRITE A NOTE" யை கிளிக் செய்யுங்கள்.

4.அந்த பக்கத்தில் ஏதாவது ஒரு வாசகத்தை எழுதி அதை "SAVE DRAFT" -கிளிக் செய்து சேமித்து கொள்ளுங்கள்.
(இந்த வாசகத்தை பின்னர் அழித்து கொள்ளலாம்)

5.வாசகங்களை சேமித்த பின்னர் கீழே "EDIT IMPORT SETTINGS"-யை கிளிக் செய்யுங்கள்.இப்போது நம்முடைய வலைப்பக்கத்தின் முகவரியை கொடுக்க வேண்டிய புதிய பக்கம் திறக்க படும்.

6.அந்த புதிய பக்கத்தில் நம்முடைய வலைப்பக்கத்தின் முகவரியை டைப் செய்து "START IMPORTING" என்பதை கிளிக் செய்யுங்கள்.இப்போது உங்களுடைய வலைப்பக்கம் பேஸ்புக்குடன் பகிர்வு துவங்கி விடும்.

7.அடுத்த படியாக உறுதிபடுத்துவதற்காக "CONFIRM IMPORT" என்பதனை கிளிக் செய்யுங்கள்.

8.அவ்வளவுதான் இப்போது உங்களுடைய வலைப்பக்கம் பேஸ்புக்குடன் பகிர்ந்து விடும்,நம்முடைய அடுத்த பதிவுகள் நேரடியாக பேஸ்புக்கில் பகிர படும்.

நீங்களும் முயற்சித்து பாருங்கள்....
பயனுள்ளதாக இருந்தால் பின்னூட்டம் எழுதுங்கள்.... 
 

Friday, April 1, 2011

இன்டர்நெட்! ஏமாறாமல் இருக்க பாதுகாப்பான வழிகள்!

இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

சிறிது சலனப் பட்டாலும், நாம் நிதானம் தவறி, நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம்.

இது போல பலியாகாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகளை இங்கு பார்க்கலாம்.

1. முன்பணம் கட்டாதீர்கள்:

ஏமாற்றப்படும் பல வேளைகளைப் பட்டியலிட்டால், முன் பணம் கட்டச் சொல்லி அழைக்கும் அழைப்புகளுக்குப் பலியாவோரே அதிகமாய் இருப்பதைப் பார்க்கலாம். பெரிய பரிசு உள்ளது, கடன் தீர்க்கப் பணம் தருகிறோம், பெரிய வேலை உங்களுக்கு மட்டுமே தருகிறோம், இலவசமாய் இயக்கிப் பார்க்கலாம் என செய்திகளைத் தந்து, தூண்டிலிட்டு, பின்னர் அதற்கு சரி என்கையில், முன் பணமாக ஒரு தொகையை செலுத்தச் சொல்லி அழைப்பு வரும். இதனை மிக அழகாக நியாயப்படுத்தியும் செய்தி தரப்படும்.

பெரிய அளவில் தான் பணம் அல்லது உதவி கிடைக்கப் போகிறதே, செலுத்தினால் என்ன என்று ஒரு கணம் எண்ணிவிட்டால், உங்கள் பணம் அவ்வளவு தான். அல்லது தொடர்ந்து மேலும் மேலும் பணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவீர்கள். இது போல செய்திகளை, அது எந்த இடத்திலிருந்து வந்தாலும் உதாசீனப் படுத்திவிடுவதே, நாம் பலியாகாமல் இருக்க ஒரே வழி.

2. அக்கவுண்ட் எண் தரலாமா?

மெயில்களை அனுப்பி உங்களை வீழ்த்தும் பெரும்பாலான ஸ்கேம் செய்திகளில், உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் எண், நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் கேட்டு வரும் மெயில்களே அதிகம். அக்கவுண்ட் எண் மற்றும் தகவல்களைக் கொடுத்துவிட்டால், உங்கள் அக்கவுண்ட் அவ்வளவுதான்.

பைசா கூட அதில் இருக்காது. நீங்கள் சரியான இணைய தளத்தில் பொருள் வாங்குவதாக இருந்தாலும், உங்கள் கிரெடிட் கார்டை மட்டுமே பயன்படுத்தவும்.

3. தானாக தனி நபர் தகவல் தரலாமா?

ஒரு சிலர் மெயில் செய்தியில் வரும் ஏமாற்று வார்த்தைகளை நம்பி, தங்களைப் பற்றிய தனி நபர் தகவல்களைத் தந்துவிடுவார்கள். சிலர் தாங்கள் பணியாற்றும் நிறுவனம் குறித்த தகவல்களையும் தங்களை அறியாமல் தந்து மாட்டிக் கொள்வார்கள். இது போன்ற விஷயத்தில் அதிகக் கவனத்துடன் நடந்து கொண்டு, மாட்டிக் கொள்ளும் நிகழ்வினைத் தவிர்க்க வேண்டும்.

4.போலி பேஸ்புக் செய்திகள்:


பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாமல் இருந்தால் கூட, உங்கள் அக்கவுண்ட்டிற்குப் பலவாரியாக செய்திகள் வரும். புகழ்பெற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள் - அது பற்றி அறிய வேண்டுமா என ஒரு செய்தி உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை ஒருவர் நீக்கிவிட்டார், நீக்கியவர் யாரெனத் தெரியும். மீண்டும் அக்கவுண்ட் தொடங்கலாமே என்று ஒரு செய்தி வரும். இது போன்ற செய்திகள் எல்லாம், உங்களைச் சிக்க வைக்கத்தான்.

5. வீடு தேடி வரும் பொருட்களை இணைய தளத்தில் வாங்க வேண்டாம்:


இணைய தள வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பலர் இதில் பொருட்களை வாங்கிப் பயன் பெற்று வருகின்றனர். ஆனால், நாம் நாள்தோறும் நம் வீட்டு வாசலில் விற்பனை செய்யப்படும், அடுத்த கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை, இணைய தளத்தில் வாங்க வேண்டுமா? விலை குறைவாகக் காட்டிப் பின்னர், அனுப்பும் செலவு, செயல்படும் செலவு, இணைய வரி எனப் பல தலைப்புகளில் காசைக் கறந்துவிடுவார்கள்.

இந்த ஐந்து வழிமுறைகளையும் கையாண்டால் ஓரளவிற்கு நாம் ஏமாறுவதை நாமே தவிர்க்கலாம்.

Friday, March 25, 2011

விண்டோஸ் - 7 புதிய தகவல்கள்

விண்டோஸ் 7 பயன்பாடு தொடர்ந்து பன்னாட்டளவில் அதிகரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த சிஸ்டம் தன்னிடத்தே கொண்டிருக் கின்ற பல வசதிகள் பயனாளர்களுக்குத் தெரிய வருகின்றன.

அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


1. பைல்கள் இடையே எளிதாக:


ஏதேனும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், ஒன்றுக்கு மேற்பட்ட பல பைல்களை, ஒரே நேரத்தில் உருவாக்கிச் செயல்படும் சூழ்நிலை உருவாகலாம். எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில், பல டாகுமெண்ட்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து கையாளலாம்.

இந்த நேரத்தில், இந்த பைல்கள் திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் இடையே சென்று வர, விண்டோஸ் 7 எளிய வழியைத் தருகிறது. டாஸ்க்பாரில் உள்ள பைல்களின் ஐகான்களில் கிளிக் செய்கையில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டால், ஒவ்வொருமுறை கிளிக் செய்கையிலும், அடுத்தடுத்த விண்டோ செயல்பாட்டிற்கு கிடைக்கும்.


2.விண்டோக்களைக் கையாளுதல்:


விண்டோஸ் 7, டாகுமெண்ட் மற்றும் புரோகிராம்களைக் கையாள புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. விண்டோ ஒன்றினைக் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் நிறுத்தலாம். இதனை ”docking” என விண்டோஸ் 7 கூறுகிறது.

செயல்படும் விண்டோவினை ஏதேனும் ஒரு பக்கமாக, பாதி திரையில் வைத்திட, அதனை இடது அல்லது வலது பக்கமாக, மவுஸ் கொண்டு இழுத்தால் போதும். விண்டோ தானாக, தன் அளவை பாதி திரைக்கு மாற்றிக் கொள்ளும். அதே போல, மேலாக இழுத்தால், விண்டோ பெரிதாகும். கீழாக இழுத்தால், சிறிய அளவில் மாறும்.

பாதி திரையில் வைத்தபடி, நெட்டு வாக்கில் இந்த விண்டோவினை அமைக்கலாம். பாதி திரை அளவில் இருந்தவாறே, நெட்டு வாக்கில் விரியும், குறையும்.இந்த செயல் பாடுகளை கீகள் மூலமும் இயக்கலாம்.

விண்டோஸ் கீயுடன் இடது அம்புக் குறி அல்லது வலது அம்புக் குறியைப் பயன்படுத்தினால், விண்டோ திரையின் பாதி அளவில் சென்று தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும்.

இதே போல, விண்டோ கீயுடன் மேல் மற்றும் கீழ் அம்புக் குறியினைப் பயன்படுத்தினால், விண்டோ சுருங்கும், விரியும். விண்டோ + ஷிப்ட்+ மேல் அம்புக் குறி கீகளை அழுத்தினால், அல்லது கீழ் அம்புக் குறி கீயை அழுத்தினால், நெட்டு வாக்கில் திரை பாதியாகும் மற்றும் விரியும்.


3. பல மானிட்டர் செயல்பாடு:


ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்களை ஒரு கம்ப்யூட்டருடன் இணைத்துச் செயல்படுத்த, விண்டோஸ் 7 எளிதான வழியைத் தருகிறது. இவற்றை இணைத்த பின்னர், விண்டோ+ஷிப்ட்+இடது அம்புக்குறி கீ / வலது அம்புக் குறி கீ களை அழுத்த, செயல்பாடு ஒவ்வொரு மானிட்டராக மாறிச் செல்லும்.


4.உங்கள் டெஸ்க்டாப்பை உடன் அணுக:

விண்டோஸ் 7 தொகுப்பில் தரப்பட்டுள்ள, மிகத் திறன் கொண்ட ஒரு டூல்,டெஸ்க்டாப் கிடைக்க கொடுக்கப் பட்டுள்ள பட்டன் தான். டாஸ்க்பாரின் வலது மூலையில் கடிகாரத்திற்கு அருகே உள்ள சிறிய செவ்வகக் கட்டத்தில் கிளிக் செய்தால், உடனே டெஸ்க்டாப் திரை காட்டப்படும்.

இதனையே விண்டோ கீ + ஸ்பேஸ் கீ அழுத்தியும் பெறலாம்.


5. சிக்கல் இல்லாத விண்டோ செயல்பாடு:

நம் வாழ்க்கையில் எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகளில் மூழ்கிச் சிக்கலில் சிக்கிக் கொள்வோம். விண்டோஸ் தொகுப்பின் செயல்பாட்டிலும், இதே போல பல புரோகிராம் விண்டோக்களைத் திறந்து வைத்து சிக்கிக் கொள்வோம்.

விண்டோஸ் 7 சிஸ்டம், நீங்கள் இயக்கும் விண்டோ தவிர மற்ற அனைத்தையும் பின்னுக்குத் தள்ளுகிறது. விண்டோ + ஹோம் கீகளை அழுத்த, அனைத்து செயல்படாத விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். அதாவது நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைல் உள்ள விண்டோ மட்டுமே திரையில் இருக்கும்.

மற்ற அனைத்தும் மினிமைஸ் செய்யப்படும். மீண்டும் அவை அனைத்தும் வேண்டும் என்றால், மீண்டும் விண்டோ கீ + ஹோம் கீ களை அழுத்தினால் போதும்.


6.ஹெல்ப் டெஸ்க்கிற்கு உதவி:


என்னதான் ஹெல்ப் டெஸ்க் உதவி சிஸ்டத்தில் இருந்தாலும், பிரச்னை என்னவென்று நாம் தெளிவாகத் தெரிவித்தால் தான், சிக்கலுக்கான தீர்வினை ஹெல்ப் டெஸ்க் நமக்குத் தர முடியும். சிக்கலின் பின்னணியைக் கம்ப்யூட்டரே பதிந்து தரும் வகையில், விண்டோஸ் 7 “Problem Steps Recorder” என்று ஒரு டூலைத் தந்துள்ளது.

இது ஒரு ஸ்கிரீன் கேப்சர் டூல். இதன் மூலம் பிரச்னை ஏற்பட்ட நிலைகள் ஒவ்வொரு திரைக் காட்சியாகப் பதியப்படுகிறது. இது ஒரு எச்.டி.எம்.எல். பைலாக உருவாக்கப்பட்டு, பின்னர் ஸிப் பைலாக பார்மட் செய்யப்பட்டு, ஹெல்ப் டெஸ்க்கிற்கு அனுப்பப்படுகிறது.

இந்த பதிந்திடும் புரோகிராம் கண்ட்ரோல் பேனலில் கிடைக்கிறது. “Record steps to reproduce a problem” என்ற பிரிவில் இது உள்ளது. அல்லது psr.exe என்ற பைலை இயக்கினால் போதும்.


7.டாஸ்க் பாரில் போல்டர்கள்:

வழக்கமாக, நாம், ஒரு குறிப்பிட்ட போல்டரில் அடிக்கடி பயன்படுத்தும் பைல்களை வைத்திருப்போம். கம்ப்யூட்டரை இயக்கியவுடன், இந்த போல்டருக்குத்தான் அடிக்கடி சென்று, திறந்து அதில் உள்ள பைல்களை டபுள் கிளிக் செய்து இயக்குவோம்.

இவ்வாறு அடிக்கடி திறக்கும் போல்டர்களை, உங்கள் விரல் நுனியில் வைத்துக் கொள்ள, விண்டோஸ் 7 உதவுகிறது. அடிக்கடி பயன்படுத்தும் போல்டரின் மீது ரைட் கிளிக் செய்து, அப்படியே இழுத்து வந்து, டாஸ்க்பாரில் போட்டு வைக்கலாம்.

அங்கே போல்டர் ஐகானாக அது அமர்ந்துவிடும். பின்னர், அதில் கிளிக் செய்து, மிக எளிதாக பைல்களைப் பெறலாம். குயிக் லாஞ்ச் புரோகிராம் போல, இது குயிக் லாஞ்ச் போல்டராகச் செயல்படுகிறது.

Saturday, January 1, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

                   துன்பம் தொலைந்து இன்பம் வந்தால் மனதில் நிம்மதி,ஆனால் இன்பம் போய் துன்பம் வந்தால் மனதில் சஞ்சலம்...

                  2010 என்னும் ஒரு வருடத்தை நாம் கடந்து,2011 என்னும் புத்தாண்டுக்குள் வந்திருக்கிறோம்.ஆனால் சில பேர்க்கு இது இனிய வருடமாக அமையும்.சிலருக்கு இது துன்பமான வருடமாக அமையும்.அனால் துன்பத்தை நினைத்து  துவண்டு போகாமல்.அதை எதிர்த்து நின்று வெற்றியை கண்டடைய எனது வாழ்த்துக்கள்.

                எல்லோரையும் வாழ்த்தும் போது,நமக்கான வாழ்த்து முறையாக நம்மிடம்  வந்து சேரும்.இந்த புத்தாண்டிலே அனைவரையும் வாழ்த்துவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

               எந்த விதமான துன்பமும்,வருத்தங்களும் இல்லாமல் இந்த ஆண்டு  சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக அமைய இறைவன் நாமத்தினால் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting