Saturday, January 1, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

                   துன்பம் தொலைந்து இன்பம் வந்தால் மனதில் நிம்மதி,ஆனால் இன்பம் போய் துன்பம் வந்தால் மனதில் சஞ்சலம்...

                  2010 என்னும் ஒரு வருடத்தை நாம் கடந்து,2011 என்னும் புத்தாண்டுக்குள் வந்திருக்கிறோம்.ஆனால் சில பேர்க்கு இது இனிய வருடமாக அமையும்.சிலருக்கு இது துன்பமான வருடமாக அமையும்.அனால் துன்பத்தை நினைத்து  துவண்டு போகாமல்.அதை எதிர்த்து நின்று வெற்றியை கண்டடைய எனது வாழ்த்துக்கள்.

                எல்லோரையும் வாழ்த்தும் போது,நமக்கான வாழ்த்து முறையாக நம்மிடம்  வந்து சேரும்.இந்த புத்தாண்டிலே அனைவரையும் வாழ்த்துவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

               எந்த விதமான துன்பமும்,வருத்தங்களும் இல்லாமல் இந்த ஆண்டு  சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக அமைய இறைவன் நாமத்தினால் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting