Saturday, May 2, 2009

கருணாநிதியும்,ஜெயலலிதாவும்,இலங்கை தமிழர்களின் எதிரிகள்.

கருணாநிதியும்,ஜெயலலிதாவும்,இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் நடத்தி கொண்டு இருக்கிறார்கள்.இது பற்றி விஜயகாந்த் கூறுகையில்,
இலங்கைப் பிரச்னை குறித்து ஜெயலலிதா தமிழீழம் ஒன்று தான் தீர்வு எனப் பேசி வருகிறார். அவர் இவ்வளவு நாட்கள் இதுகுறித்து மவுனமாக இருந்துவிட்டு தற்போது பேசுவது தேர்தலுக்காக தான். இலங்கையில் போர் நிறுத்தம் அறிவித்தது அங்கு தமிழர்கள் முழுவதும் கொலை செய்யப்பட்டுவிட்டனர். இனியும் குண்டு போட்டால் அங்குள்ள சிங்களர்கள் தான் இறந்து போவார்கள். எனவே தான், போர் நிறுத்தம் அறிவித்துள்ளனர். இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது, தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக நடத்திய நாடகம் தான். கருணாநிதி அணிந்து வரும் மஞ்சள் துண்டு குரு பகவானைக் குறிக்கும்.

DMDK எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை. மக்கள் மற்றும் ஆண்டவனோடு மட்டும் தான் கூட்டணி அமைத்துள்ளோம். லோக்சபா தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தேர்தலில் கூட்டணி அமைப்பது கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்து, பின் பங்கு போட்டுக்கொள்வதற்காக தான். மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்க விரும்பாததால் தான் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் மக்களோடு கூட் டணி வைத்து தேர்தலை . இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
'கருணாநிதிக்கு நடிக்கவும் தெரியும்': வறுமையும், ஊழலும் இரண்டற கலந்தது தான் தி.மு.க., ஆட்சி. இலங்கைப் போர் நிறுத்தம் குறித்து கருணாநிதி ஒரு நாடகத்தை காலை 6 மணிக்குத் துவங்கி 12.30 மணிக்கு முடித்துள் ளார். போர் நிறுத்திவிட்டதாகக் கூறி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அதாவது, காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக உள்ளது கருணாநிதியின் உண்ணாவிரத நாடக அரங்கேற்றம். சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக இருந்தால் ரத்தக் கொதிப்பு இருப்பதைப் பார்க்க எதற்கு அங்கு டாக்டர்கள்? கருணாநிதிக்கு கதை வசனம் மட்டுமே தெரியும் என்று பார்த்தேன். ஆனால், நன்றாக நடிக்கவும் செய்கிறார்.

போர்வை போர்த்தி எட்டு ஏர் கூலர்கள் வைத்துக் கொண்டு வாடினேன், வதங்கினேன் என்றால் நியாயமா? தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் இலங்கைத் தமிழர்களை வைத்து ஏமாற்றுவேலை நடத்தி வருகின்றனர்.இலங்கைப் பிரச்னை குறித்து ஜெயலலிதா தமிழீழம் ஒன்று தான் தீர்வு எனப் பேசி வருகிறார். அவர் இவ்வளவு நாட்கள் இதுகுறித்து மவுனமாக இருந்துவிட்டு தற்போது பேசுவது தேர்தலுக்காக தான். இலங்கையில் போர் நிறுத்தம் அறிவித்தது அங்கு தமிழர்கள் முழுவதும் கொலை செய்யப்பட்டுவிட்டனர். இனியும் குண்டு போட்டால் அங்குள்ள சிங்களர்கள் தான் இறந்து போவார்கள். எனவே தான், போர் நிறுத்தம் அறிவித்துள்ளனர். இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது, தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக நடத்திய நாடகம் தான். கருணாநிதி அணிந்து வரும் மஞ்சள் துண்டு குரு பகவானைக் குறிக்கும்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting