Wednesday, August 11, 2010

பதிவர்கள் சந்திப்பு...

அன்பான பதிவுலக தோழர்கள் அனைவரும் சந்திப்பதற்கான  ஓர் அறிய வாயப்பு...

                                   சுரேஷ்குமார் என்னும் பதிவரின் திருமணம் வருகின்ற 19 -ம் தேதி (19-08-2010) அன்று நடக்க உள்ளது.இந்த திருமணமானது முட்டைகாடு C.S.I சபையில் வைத்து நடைபெறும்.முட்டைகாடு என்பது குமரி மாவட்டம்,தக்கலை அருகே உள்ளது.


                                 நம்முடைய பதிவர் குடும்பத்தில் ஒருவரான சுரேஷ் குமார் அவர்களின் திருமணத்தை, பதிவர்களாகிய நாம் தான் சிற்பிக்க வேண்டும்.பதிவர்கள்  வருவதற்கான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம்.தங்குவதற்கான ஏற்பாடும்,இதர வசதிகளும் செய்துள்ளோம்.

                                  அவருடைய திருமணம் முடிந்த பிற்பாடு குமரியின் குற்றாலம் திற்பரப்பு அருவியில் வைத்து பதிவர்கள் சந்திப்பு நடைபெறும்.

                                 அந்த சந்திப்பில் பதிவுலகில் நண்பர்களாக இருக்கும் நாம் நேரில் நம்முடைய கருத்துக்களை பரிமாறி கொள்ளலாம்.

                                 வெளி நாடுகளில் இருக்கும் நண்பர்கள் நேரில் வர முடியாத காரணத்தினால் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவிக்கலாம்.

                                 சுரேஷ் குமார் அவர்களின் வலைபகுதியை பார்க்க விருப்பம் உள்ளவர்கள்,இங்கே சொடுக்குங்கள். அவர் ஏற்கனவே அழைப்பிதழை பதிவாக வெளியிட்டுள்ளார்,இந்த பதிவை பார்க்க இங்கே சொடுக்குங்கள்.

                                 மேலும் விவரத்திற்கு +919994796659 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழையுங்கள்.இது என்னுடைய தொலைபேசி எண் தான்.

                                  நானும் அவர் ஊரை சார்ந்த பதிவர் என்பதால் மட்டுமல்ல,என்னுடைய வலைபதிவின் குரு என்ற முறையிலும் தான் இந்த அழைப்பை விடுக்கிறேன்.

ஆகவே வாரீர் புதுமண தம்பதிகளை வாழ்த்தி,பதிவர் சந்திப்பை சிறப்பித்து செல்லுங்கள்...

1 comments:

ம.தி.சுதா said...

இவருக்கு இலங்கை பதிவர்கள் சார்பாக என் வாழ்த்துக்களை சேர்ப்பிக்கவும்... நன்றிகள்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting