Saturday, May 2, 2009

DMDK Party captain rocks

நம்முடைய வருங்கால முதல்வர் கேப்டன் விஜயகாந்த் இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் போட்டி இட்டு வெற்றி காண உள்ளார்.அவர் தீய சக்திகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
இன்று தே.மு.தி.க தமிழகத்தில் தனி பெரும்பான்மையில் முதல் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இதற்கு காரணம் விஜயகாந்தின் கூட்டணி தான் காரணம்.கூட்டணி என்றால் மக்களுடனும் தெய்வத்துடனும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.நாளைய சமுதாயத்தின் ஒழி விழகான விஜயகாந்த் மக்களுக்காக பல நற்திட்டங்களை வகுத்துள்ளார்.அவைகள் பின்வருமாறு.

* கர்நாடகத்தில் உள்ள நீர்வளத்தைக் கொண்டே இரு மாநிலங்களின் தேவையையும் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை தே.மு.தி.க., மத்திய அரசின் மூலம் மேற்கொள்ளும்.
* கேரள மக்களின் அச்சத்தை போக்கி, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி தமிழகத்துக்கு பயன்பட வழிவகை காணப்படும்.
* ஆந்திர மாநில பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்க வகை செய்யப் படும்.
* கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய பாடுபடும்.
* உலகத்தில் வசிக்கும் தமிழர்களின் உரிமை பறிக்கப்படும் போது, அவர்கள் நலனுக்காக மத்திய அரசை தே.மு.தி.க., நிர்பந்திக்கும்.
* தமிழக எல்லையில் உள்ள கேரளா சொந்தம் கொண்டாடும் கண்ணகி கோவிலை, தமிழகத்துக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
* தேசிய நதிநீர் இணைப்புக்கு முன்னுரிமை கொடுத்து, அதற் கான உடனடி முயற்சியில் ஈடுபடும்.
* சேது சமுத்திர திட்டத்தை மீனவர்களுடன் கலந்து பேசி, எந்த மதத்தினரும் புண்படாத வகையில் மாற்றி அமைத்து செயல்படுத்துவோம். இத்திட்டத்தில் நடந்த ஊழல் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர தே.மு.தி.க., முயற்சி எடுக்கும்.
* மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
* விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த நடவடிக்கை மற்றும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம்.
* புதுச்சேரி, மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு கேப்டன் அறிக்கை விடுத்துள்ளார்.

1 comments:

Suresh Kumar said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting