
ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்கும் என்னிடம்
ஒருவர் கேட்டார் - எதற்காக இதனை கஷ்டப்படுகிறாய்?
நான் கேட்டேன் - கஷ்டப்படாமல் எப்படி வாழ்கையை ஓட்ட முடியும்?
அவர் சிரித்த படி சொன்னார் - என்னை பார்,
1 ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிடுவேன்.
போரடித்தால் வண்ணத் தொலைகாட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்.
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,
உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!
உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்?
முதலாமவர் சிரித்த படி கேட்டார் - நான் யார் தெரியுமா?
தமிழ் நாட்டுக் குடிமகன்
என் நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்
சமைப்பதற்கு கேசும் அடுப்பும் இலவசம்,
பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைக்காட்சி...