Tuesday, November 16, 2010

"Drop Down Menu" எவ்வாறு தயார் செய்வது?

"Drop Down Menu" என்றால் என்ன என்ற கேள்விக்கு பதில் கீழே கொடுக்க பட்டுள்ளது,பாருங்கள்,



எப்படி இந்த மெனுவை தயார் செய்வது என்று பார்க்கலாம்,
கீழே கொடுக்க பட்டுள்ள நிரலை copy செய்து,
Dashboard-->Design-->Page Element-->Add Gadjet-->Html சென்று Paste செய்யவும்.

<select onChange="document.location.href=this.options[this.selectedIndex].value;">
<option value="0" selected>Blog Archive</option>
<option value="Links 1">Text 1</option>
<option value="Links 2">Text 2</option>
</select>
 இதில் சிவப்பு நிறத்தில் இருக்கும் எழுத்துக்களை நீக்கி விட்டு,உங்களுக்கு விருப்பமான பகுதியின் Link-ஐ டைப் செய்யவும்,

இதில் நீல நிறத்தில் இருக்கும் எழுத்துகளை நீக்கி விட்டு,நீங்கள் கொடுக்கும் link-இன் தலைப்பை டைப் செய்யுங்கள்.

எடுத்து காட்டாக,


<select onchange="document.location.href=this.options[this.selectedIndex].value;">
<option value="http://www.jerin.co.in" selected />Home
<option value="http://www.kotticode.com" /> Kotticode
<option value="http://www.luckystar.kotticode.com" />  Luckystar
</select>


என்று கொடுத்தால்,






இவ்வாறு உங்களுடைய மெனு தயார் ஆகும்.

இதிலே மூன்று Link மட்டும் தான் கொடுக்க பட்டுள்ளது.மேலும் Link நீங்கள் வைக்க விரும்பினால்,
</select> என்ற வார்த்தையின் முன்பு,



<option value="Links 3">Text 3</option>


என்று  டைப் செய்து கொள்ளுங்கள்.பின்பு மாற்றங்களை சேமித்து கொள்ளுங்கள்.இப்போது உங்களுக்கு "Drop Down Menu" தயாராகி விடும்.


புடிதிருந்தால் பின்னூட்டம் எழுதுங்கள்...

Saturday, November 13, 2010

பிளாக்கர் "Required Field Must Not Be Blank" என்ற பிழையை சரி செய்யும் வழி...

                                  நாம் பிளாக்கரில் புதிதாக Widjet சேர்க்கும் போது,அதனுடைய தலைப்பு கொடுக்கவில்லை என்றால் "Required Field Must Not Be Blank" என்ற பிழை  வருகிறது.இந்த பிழை தோன்றுவதன் காரணமாக நமக்கு அந்த widjet- ஐ நம்மால் சேமிக்க முடியாமல் போய் விடுகிறது.

                                   அதனால் நாம் ஏதாவது ஒரு தலைப்பினை கொடுத்து சேமித்து விடுகிறோம்.அந்த பிழையை திருத்துவதற்கான வழியை நாம் கீழே பார்க்கலாம்.
                                   இந்த பிழையை திருத்த ஒரு எழிமையான வழி உள்ளது.எப்படியெனில் ஒரு html கோடிங்கை மட்டும் கொடுத்தால் போதும்.


<!-- -->

தலைப்பில் மேலே கொடுக்க பட்டுள்ள கோடிங்கை கொடுத்தால் போதும்,பின்பு சேமித்து கொள்ளலாம்.இப்போது தலைப்பு இல்லாமல் widjet நாம் சேமித்து கொள்ளலாம்.
          
                    <!-- பின் தொடர்க --> என்று நாம் டைப் செய்தாலும்,பின் தொடர்க என்ற எழுத்துக்கள் தலைப்பில் இடம் பெறாது.

                    நீங்களும் முயற்சித்து பாருங்கள்,நிச்சயமாக பயனுள்ளதாய் அமையும்...

நானா வேலைக்கு போகிறேன்?

                                காலை எழுந்து சாபிட்டு கல்லூரி சென்ற காலம் கடந்து போயிற்று.......படித்து முடித்த உடன் வேலைக்கு செல்ல வேண்டுமென்பது பெற்றோர் விருப்பம்,மட்டுமல்லாமல் அனைவரது விருப்பமும் அது தான்.ஆனால் சொந்த ஊரிலே வேலை பார்க்கும் பாக்கியம் சிலருக்கு தான் கிடைகிறது.
                        
                                  நானும் சென்னை,பெங்களூரு,மும்பை என வெளி ஊர்களிலே வேலை செய்து வந்தேன்.இருப்பினும் மாதம் ஒரு முறை ஊருக்கு வருவது எனக்கு புடித்த ஓன்று.அதையே வாடிக்கையாக கொண்டிருந்தேன்.

                                 அதற்கும் வச்சிட்டாங்கப்பா  ஆப்பு.இப்போது துபாய் நாட்டிலே சென்று வேலை பார்ப்பதற்கு  ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.நல்ல வேலை தான், ஆனால் என்ன செய்வது மாதம் ஒரு முறை ஊருக்கு வர முடியாமல் போய் விடும் என்று நினைக்கும் போது தான் மனதில் வருத்தம் வருகிறது.

                                 "சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா" என்று சொல்லி,ஊரையே சுற்றி வந்த நானா இப்போது  துபாயில் வேலைக்கு செல்கிறேன் என்று நினைக்கும் போது கஷ்டமாக தான் இருக்கிறது.

                                இருப்பினும் வேலைக்கு செல்லாமல் சோம்பேறியாக இருக்கும் சிலருக்கு மத்தியில் நானும் வேலைக்கு செல்கிறேன் என்று நினைக்கும் போது உண்மையாகவே சந்தோசம் தான் என் மனதில்.


                               ஆகவே தோழர்களே,என்னை வாழ்த்தி அனுப்புங்கள் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

Monday, November 8, 2010

மொபைலில் ஜி-டாக் வசதிக்கு அருமையான மென்பொருள்...

                           
                                     இப்போது  பலர் ஜி-டாக் மூலம் பேசுவதும்,சாட் செய்வதும் பொழுது  போக்காக கொண்டுள்ளனர்.ஆனால் கணினி  முன்னால் எப்போதும் இருப்பது மிகவும் கடினமான விஷயம் தான்.மொபைலில் இதற்கான மென்பொருளை தரவிறக்கி இப்போது சுலபமாக கூகிள்,யாஹூ,எம் எஸ் என் போன்றவற்றை பயன்படுத்தி மகிழலாம்.

                               mig33,e-buddy   போன்ற மென்பொருள்களை இப்போது பலரும் உபயோகித்து வருகிறார்கள்.இருப்பினும் இந்த மென்பொருள்களை உபயோகிக்கும் போது ஒரு பிரச்னை நம்மால் உணர முடிகிறது என்னவென்றால், மொபைல் மூலம் தான் கூகிள் கணக்கை நிறுவி இருக்கிறோம் என்பதனை எழிதாக சுட்டி காட்டுகிறது.

                               இந்த பிரச்சனையை சரி படுத்தும் முறையில் புதிதாக ஒரு மென்பொருளை உங்களுக்கு தெரிய படுத்துகிறேன்.நம்மில் பலருக்கு இதை பற்றி தெரிந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளன.இருப்பினும் தெரியாத பலரும் நிச்சயமாக இருப்பார்கள்.தெரியாதவர்களுக்கு இந்த பதிவு முக்கியமானதாக அமையும் என நம்புகிறேன்.

                               இந்த மென்பொருளின் பெயர் TALKAUNOUT.இதனை உபயோகிப்பதன் மூலம் நாம் எழிதாக  google,yahoo,msn,கணக்கினை நாம் நிறுவ முடியும்,மட்டுமல்லாமல் நாம் மொபைல் மூலம் தான் இதனை பயன்படுத்துகிறோம் என்பதனை யாராலும் கண்டுபுடிப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

                               இதனை தரவிறக்க "இங்கே சொடுக்குங்கள்"

 உபயோகித்து பாருங்கள்,நிச்சயம் இதனை பயன்படுத்துவீர் என நம்புகிறேன்.

Wednesday, August 11, 2010

பதிவர்கள் சந்திப்பு...

அன்பான பதிவுலக தோழர்கள் அனைவரும் சந்திப்பதற்கான  ஓர் அறிய வாயப்பு...

                                   சுரேஷ்குமார் என்னும் பதிவரின் திருமணம் வருகின்ற 19 -ம் தேதி (19-08-2010) அன்று நடக்க உள்ளது.இந்த திருமணமானது முட்டைகாடு C.S.I சபையில் வைத்து நடைபெறும்.முட்டைகாடு என்பது குமரி மாவட்டம்,தக்கலை அருகே உள்ளது.

                                 நம்முடைய பதிவர் குடும்பத்தில் ஒருவரான சுரேஷ் குமார் அவர்களின் திருமணத்தை, பதிவர்களாகிய நாம் தான் சிற்பிக்க வேண்டும்.பதிவர்கள்  வருவதற்கான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம்.தங்குவதற்கான ஏற்பாடும்,இதர வசதிகளும் செய்துள்ளோம்.

                                  அவருடைய திருமணம் முடிந்த பிற்பாடு குமரியின் குற்றாலம் திற்பரப்பு அருவியில் வைத்து பதிவர்கள் சந்திப்பு நடைபெறும்.

                                 அந்த சந்திப்பில் பதிவுலகில் நண்பர்களாக இருக்கும் நாம் நேரில் நம்முடைய கருத்துக்களை பரிமாறி கொள்ளலாம்.

                                 வெளி நாடுகளில் இருக்கும் நண்பர்கள் நேரில் வர முடியாத காரணத்தினால் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவிக்கலாம்.

                                 சுரேஷ் குமார் அவர்களின் வலைபகுதியை பார்க்க விருப்பம் உள்ளவர்கள்,இங்கே சொடுக்குங்கள். அவர் ஏற்கனவே அழைப்பிதழை பதிவாக வெளியிட்டுள்ளார்,இந்த பதிவை பார்க்க இங்கே சொடுக்குங்கள்.

                                 மேலும் விவரத்திற்கு +919994796659 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழையுங்கள்.இது என்னுடைய தொலைபேசி எண் தான்.

                                  நானும் அவர் ஊரை சார்ந்த பதிவர் என்பதால் மட்டுமல்ல,என்னுடைய வலைபதிவின் குரு என்ற முறையிலும் தான் இந்த அழைப்பை விடுக்கிறேன்.

ஆகவே வாரீர் புதுமண தம்பதிகளை வாழ்த்தி,பதிவர் சந்திப்பை சிறப்பித்து செல்லுங்கள்...

Monday, August 9, 2010

மொபைலில் பதிவுகளை தமிழில் வாசிக்க...

                                  மொபைலில் பதிவுகளை தமிழில் வாசிக்க வேண்டுமென்றால்,மொபைலில் தமிழ் பான்ட் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.தமிழ் வசதி இல்லாத  மொபைலாக இருந்தாலும்,இப்போது தமிழில் பதிவுகளை வாசிக்கலாம்.

                                  என்னுடைய முந்தைய பதிவில் நாகப்பன் என்ற பதிவுலக நண்பர் மொபைலில் தமிழ் மூலம் எவாறு பதிவுகளை வாசிப்பது என்று பின்னூட்டத்தில் கேட்டிருந்தார்...அவருக்கான பதிலை இந்த பதிவில் விளக்க உள்ளேன்...

                                 முதலில் உங்களுடைய மொபைலில் இணைய நண்பனாக இருக்க வேண்டும்.அடுத்த  படியாக ஒபேரா மினி உலாவியை தரவிறக்கி கொள்ளுங்கள்...
ஒபேரா மினி தரவிறக்க உங்களுடைய மொபைலில் இருந்து http://mini.opera.com செல்லுங்கள்...

தரவிறக்கிய உடன்  ஒபேரா மினி அட்ரஸ் பாரில் (address  bar ),

opera:config 

என்று டைப் செய்து ok  பொத்தானை அழுத்துங்கள்.

இப்போது புதிதாக திறக்கும் பக்கத்தில்,

Use bitmap fonts for complex scripts  

என்ற வசதியில் NO   என்று இருந்தால்,YES என்று மாற்றி கொள்ளுங்கள்.
உணகளுடைய மாற்றங்களை சேமித்தும் கொள்ளுங்கள்...

இப்போது உலவியிலிருந்து வெளியேறி மறுபடியும் உள்நுழையுங்கள்...

அவ்வளவு தான் இப்போது உங்களுக்கு விருப்ப பட்ட பதிவுகளை உங்களுடைய மொபைலில் இருந்தே வாசிக்கலாம்...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting