Friday, October 28, 2011

மலையாள திரைப்படங்களின் இன்றைய நிலை....

                     தமிழ் திரைப்படங்களை விமர்ச்சிப்பதில் வல்லுனர்கள் மலையாளிகள் என்பது எல்லோரும் அறிந்ததே...ஆனால் அப்படி பட்ட மலையாள சினிமாவில் இப்படி பட்ட ஒரு நிலைமை வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்...

                    கடந்த அக்டோபர் 26ம் தேதி கேரளத்தில் வெளி வந்த "கிருஷ்ணனும் ராதையும்" திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது...

                    இத்திரைபடத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால்,நடிப்பு,இயக்கம்,தயாரிப்பு,இசை,பாடல் வரிகள்,சண்டை பயிற்சி,கலை,பாடகர்,கதை,திரைக்கதை,வசனம்,உடைகள் போன்ற 16 பங்குகளை "சந்தோஸ் பண்டிட்" என்பவர் ஏற்றுள்ளார்.ஒரே நபர் காமெராவை தவிர மற்றுள்ள எல்லாவற்றையும் செய்து ஒரு திரைபடத்தை வெளியிட்டுள்ளார்.

                     கிருஷ்ணனும் ராதையும் திரைப்படம் கேரளா திரைப்பட உலகில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.இது வரை நடந்த அணைத்து காட்சிகளும் திரையரங்கு நிரம்பி வழிகிறது என்பது தான் இப்போதைய நிலவரம்.இந்த திரைபடத்தின் டிரைலரை(Trailer ) கீழே கொடுக்க பட்டுள்ள லிங்கில் காணலாம்...

                              "இங்கே கிளிக் செய்யுங்கள்"

                       இந்த வீடியோவை பார்த்த பின்னர் உங்களுக்கே தெரியும் இந்த திரைப்படம் எப்படி இருக்கும் என்று?இப்படியும் ஒரு திரைபடத்தை மலையாளிகள் தினமும் சென்று பார்த்து  கொண்டு தான் இருக்கிறார்கள் என்றால் அதை போன்ற ஒரு பைத்தியகார தனம் வேறு ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம்.

                     இதை போன்ற திரைபடத்தை தமிழர்கள் பார்த்தால்,என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும்....

                     இப்படியும் ஒரு திரைபடத்திற்கு,,,வரவேற்ப்பு கொடுக்கும் மலையாளிகளுக்கு தமிழ் சினிமாவின் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.......


இப்படி இருக்கிறது மலையாள திரைபடத்தின் இன்றைய நிலை....

Thursday, August 25, 2011

கணினியில் rundll32.exe கோப்பின் பிரச்சனைகள்...


                                           விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தில் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு கோப்பு தான் rundll32.exe. எனவே இந்த கோப்பு இயங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு பிழை செய்தி கிடைக்கிறது. இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த கோப்பு குறித்த சந்தேகங்கள் தெளிவாகும்.

                                         rundll32.exe கோப்பு நம் கணணியில் டாஸ்க் மேனேஜரில் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். RAM நினைவகத்தில் இந்த கோப்பு தங்கி இருந்து மற்ற கோப்புக்கள் செயல்பட உதவிடும். ஒன்று அல்லது இரண்டு புரோகிராம்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால் இந்த கோப்பின் பெயர், பிரச்சினை குறித்த பிழை செய்தியில் அடிபடுவது இயற்கையே. கணணி இயங்க அடிப்படையான டி.எல்.எல் கோப்புக்கள் இந்த ரன் டி.எல்.எல் 32 கோப்பு வழியாக இயங்குகின்றன.

                                        ஒரு டி.எல்.எல் கோப்பை நேரடியாக இயக்க முடியாது. இ.எக்ஸ்.இ அல்லது காம் கோப்புக்கள் இயக்கப்படுவது போல டி.எல்.எல் கோப்புக்கள் இயங்காது. விண்டோஸ் சிஸ்டத்திற்கு இவற்றை இயக்க இன்னொரு கோப்பு தேவைப்படுகிறது. அதுதான் rundll32.exe கோப்பு. 32 பிட் டி.எல்.எல் கோப்புக்களை இது எடுத்து இயக்குவதால் இந்த பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.

                                         இப்படி அடிப்படைச் செயல்பாட்டிற்கு இது அரிய பங்கினை அளிப்பதால் சில கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் கணணியில் rundll32.exe என்ற கோப்பு கெட்டுப் போய் விட்டதென்று செய்தி கொடுத்து சரியான rundll32.exe கோப்பு வேண்டும் என்றால் கிளிக் செய்திடவும் என ஒரு லிங்க் தரும். இதில் கிளிக் செய்தால் அந்த கோப்பானது தரவிறக்கம் செய்யப்படும். ஆனால் அது கெடுதலை விளைவிக்கும் புரோகிராமாக இருக்கும். எனவே இது குறித்து வரும் செய்திகளை பார்த்தால் சற்று கவனமாகச் செயல்பட வேண்டும்.

Sunday, May 1, 2011

கிராமம் தாழ்ந்ததும்,நகரங்கள் உயர்ந்ததுமா???

              இன்றைய தமிழகத்தில் பெரிதும் பாதிக்க பட்டுள்ள ஒரு விஷயம் என்னவென்றால், மின்வெட்டு...
            

            இந்த மின்வெட்டு காரணமாக பல தர பட்ட மக்களும் பாதிக்க பட்டுள்ளார்கள்.இதில் பெரிதும் பாதிக்க பட்டுள்ளது கிராமபுற மக்கள் தான்.

             11,300 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் தமிழகத்தில் இப்போது வெறும் 10,214 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது...மின் பற்றாகுறை காரணமாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்வெட்டு துவங்க பட்டுள்ளது...

            இதில் மின்சாரம் அதிகமாக செலவு செய்வது நகர வாசிகள் என்று அனைவராலும் சொல்ல முடியும்,கிராமங்களில் வசிக்கின்றவர்கள் மிகவும் குறைவான மின்சாரமே உபயோகித்து வருகிறார்கள்...

           இப்படியான சூழ்நிலையில் நகரங்களில் ஒரு மணி நேரமும்,கிராமங்களில் மூன்று மணி நேரமும் மின்வெட்டு இருக்கிறது...

          ஏழைகளை காப்பாற்றுவோம்,கலங்கவிடமாடோம்,கண்ணீரை துடைப்போம் என்று அரசியல்வாதிகள் மேடைக்கு மேடை பேசி கொண்டிருந்தனர்...

        ஏழைகள் பலர் இருப்பது  கிராமங்களில் தான் என்பதை அந்த அரசியல்வாதிகளான குள்ளநரிகளுக்கு புரியவில்லையா  இல்லை தெரியவில்லையா???

       சொகுசாக வாழ்பவன் அங்கே சொகுசாக வாழ்கிறான்...கஷ்ட படுகிறவன் இங்கே கஷ்ட பட்டுக்கொண்டே இருக்கிறான்...இந்நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் உழைப்பவர்கள் நிலை கேள்வி குறி ஆகி விடும் என்பதில் எந்த மாற்று கருத்தும்  இல்லை....

     நகரங்களில் வாழ்பவர்கள் மட்டும் என்ன தெய்வ பிறவிகளா? அவர்களுக்கு மட்டும் உல்லாச வாழ்கையும் கிராம புற ஏழை மக்களுக்கு கொடுமையான வாழ்க்கையா???

சிந்தியுங்கள்....சிந்தியுங்கள்....

        இன்று தொழிலாளர் தினம்,ஆனால் உண்மையிலே உழைக்கும் எல்லா  தொழிலாளர்களுக்கு சமீப காலமாக எல்லா தினங்களும் துக்ககரமான நாட்களாக தான் அமைகிறது....

       மின்சாரம் என்பது உபயோக படுவது நகரங்களில் உள்ள பெரிய தொழிற்சாலைகளுக்கு மட்டுமல்ல .கிராமங்களில் பலர் செய்கின்ற வீட்டு தொழிலுக்கும் தான் தேவைபடுகிறது...

       மின்சார பற்றாகுறை என்றால் ஒத்துகொள்கிறோம்,அனால் அதை சரி செய்வதற்கு நகரத்திற்கும்,கிராமத்திற்கும் ஒரே அழவிலான மின்வெட்டை இன்று முதல் பகிருங்கள்...

              நான் சற்று ஆவேசத்துடன் இந்த தொழிலாளர் தினத்தன்று என்னுடைய பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.....அனால் இதை வாசிக்கும் நண்பர்களே சற்று சிந்தியுங்கள்....இதற்க்கு நம் பதிவர்கள் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை......

                     

Friday, April 29, 2011

இன்றைய தமிழகம் ................

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்கும் என்னிடம்

ஒருவர் கேட்டார் - எதற்காக இதனை கஷ்டப்படுகிறாய்?

நான் கேட்டேன் - கஷ்டப்படாமல் எப்படி வாழ்கையை ஓட்ட முடியும்?

அவர் சிரித்த படி சொன்னார் - என்னை பார்,

1 ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிடுவேன்.

போரடித்தால் வண்ணத் தொலைகாட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்.

உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,

உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!

உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்?

முதலாமவர் சிரித்த படி கேட்டார் - நான் யார் தெரியுமா?

தமிழ் நாட்டுக் குடிமகன்

என் நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்

சமைப்பதற்கு கேசும் அடுப்பும் இலவசம்,

பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்,

குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சை இலவசம்

எதற்காக உழைக்க வேண்டும்?

நான் கேட்டேன் - உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?

பலமாக சிரித்த படி உரைத்தார்,


மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 இலவசம் சிகிச்சையுடன்,

குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாளர் பள்ளியில்,

படிப்பு சீருடையுடன் , மதிய உணவும் இலவசம் முட்டையுடன்,

பாடப்புத்தகம் இலவசம்,படிப்பும் இலவசம் , பள்ளி செல்ல பஸ் பாசும் இலவசம்,

தேவை என்றால் சைக்கிளும் இலவசம்.

பெண் பருவம் அடைந்தால் திருமண உதவி தொகை ரூபாய் 25000 இலவசம்,


1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம் ,

தேவை என்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,

மகள், பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்,

நான் எதற்கு உழைக்க வேண்டும்!!!

வியந்து போனேன் நான்!!!

என் உயிர் தமிழகமே எத்தனை காலம் இந்த நிலை தொடரும்?

இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு ,

ஓன்று கையூட்டு , மற்றொன்று பிச்சை !!!


இதில் நீ எந்த வகை ? எதை எடுத்து கொள்வது ?

உழைக்காமல் உண்டு சோம்பேரியாகிறாய் - இலவசம் நின்று போனால் உன் நிலை !!!

உழைப்பவர் சேமிப்பை களவாட தலைபடுவாய் !!!

இதே நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால்

அமைதி பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை

இன்னும் வெகு தொலைவில் இல்லை .

தமிழா விழிதெழு - உழைத்திடு

இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு

தமிழகத்தை தரணியில் உயர்த்திடு !!!

நாளைய தமிழகம் நம் கையில் ,

உடன்பிறப்பே சிந்திப்பாயா !!!

மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!!

Monday, April 25, 2011

பிளாக்கரில் அழித்த பின்னூட்டத்தை மறைப்பது எப்படி?

                      நாம் புதிதாக பதிவுகள் வெளியிட்ட பின்பு அந்த பதிவுனுடைய வரவேற்பினை நோக்கி இருப்பது வழக்கம்...
         
                     குறிப்பாக வாக்குகளையும்,பின்னூட்டத்தையும் மிகவும் எதிர்பார்க்கிறோம்.அதற்க்கு ஏற்ற பின்னூட்டங்களும் வாக்குகளும் கிடைக்கும் போது நாம் மகிழ்ச்சி அடைகிறோம்,இது தான் இயற்கை...

                    அனால் மறுமொழி எழுதும் போது சிலர் வரம்புகளை மீறுவதாலும்,தவறுதலாக மறுமொழி எழுதுவதாலும்,குறிப்பிட்ட பின்னூட்டத்தை நான் அழிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ள படுகிறோம்.

                   அவ்வாறு நாம் பின்னூட்டத்தை அழிக்கும் போது,அந்த பின்னூட்டம் இருந்த இடத்தில் "This post has been removed by the author" என்ற வாசகம் காணப்படும்...

                   இந்த வாசகங்கள் இருப்பதினால் நாம் பின்னூட்டத்தை அழித்திருப்பது அனைவருக்கும் தெரிய வருகிறது.அதனால் இந்த வாசகங்களை மறைக்க எழிய வழியை கீழே பார்க்கலாம்..

   1.பிளாக்கர் கணக்கில் உள்நுழைந்து Dashboard ---> Layout ---> Edit HTML செல்ல வேண்டும்.

 2.அதில் "Expand Widjet Templates" -யை கிளிக் செய்ய வேண்டும்...

 3.Ctrl + F -யை கிளிக் செய்து கீழே கொடுக்க பட்டுள்ள நிரலை காப்பி, பேஸ்ட் செய்து, கண்டுபுடிக்க வேண்டும்...

<b:loop values='data:post.comments' var='comment'> 

  4.இவற்றை கண்டுபுடித்த பின்பு,இந்த நிரலின் கீழே ,


<b:if cond='data:comment.isDeleted'>

<b:else/>
 என்னும் நிரலை காப்பி பேஸ்ட் செய்ய வேண்டும்...

 5.இப்போது " <b:loop " என்னும் எழுத்துகளுக்கு மேலே,


</b:if>

என்னும்  நிரலை காப்பி பேஸ்ட் செய்ய வேண்டும்...

 6.இப்போது இந்த மாற்றங்களை அனைத்தையும் சேமித்து கொள்ளுங்கள்...

                         இனி நாம் எப்போது பின்னூட்டங்களை அழித்தாலும் அதில் வரும் வாசகங்கள் மறைந்து விடும்...

                        


Saturday, April 23, 2011

பிளாக்கர் டெம்ப்லேட்(Template) அழிந்து போனால் திரும்ப பெறுவதற்கான வழிகள்...

               பதிவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல்,தங்களுடைய வலைபகுதியை அழகான டெம்ப்லேட் மூலமாகவும்,விட்ஜெட்கள் மூலமாகவும் அலங்கரிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்....

              ஆனால் அவ்வாறு டெம்ப்லேட் மற்றும் விட்ஜெட் சேர்க்கும் போது சில பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டி வருகிறது.சில சமயங்களில் விட்ஜெட் சேர்க்கும் போது நம்முடைய டெம்ப்லேட் அழிந்து(Corrupt) விடுகிறது...

             இந்த பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது என்று தெரியாமல் நம்மில் பலர் திணறி கொண்டு இருப்போம்...

           அந்த பிரச்சனையை சரி செய்வதற்காக மிகவும் எழிதான ஒரு வழியை இந்த பதிவில் காணலாம்.


 1.முதலில் Dashboard--->Design--->Edit HTML செல்ல வேண்டும்.

 2.அதில் Expand Widjet Template என்பதை இம்முறை கிளிக் செய்ய வேண்டிய அவசியம் இல்லை...

 3.Ctrl + F என டைப் செய்து கீழே உள்ள நிரலை காப்பி செய்து பேஸ்ட் செய்து கண்டுபுடிக்க வேண்டும்...

 <b:widget id='Blog1' locked='true' title='Blog Posts' type='Blog'/>

 4.இதில் " Blog1" என்று சிவந்த நிறத்தில் குறிக்க பட்ட எழுத்துக்களை மட்டும் மாற்றி  "Blog2" என டைப் செய்ய வேண்டும்.

 5. இப்போது மாற்றங்களை சேமித்து கொள்ளுங்கள்...

                         இப்போது நாம் இழந்த நம்முடைய வலைபகுதி மீண்டும் நமக்கு திரும்ப கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்...

                        நாம் முன்னர் சேமித்து வைத்திருந்த வாக்கு பட்டை மற்றும் இதர விட்ஜெட்கள் அனைத்தும் அழிந்து விடும்.அதனை மீண்டும் நாம் தரவிறக்கி கொள்ளலாம்...

                        நாம் தவறுதலாக எப்போதாவது இதே போல் பிரச்சனையில் சிக்கி கொண்டால் இந்த பதிவு முக்கியமானதாக இருக்கும் என நம்புகிறேன்...


                 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting